வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Thursday 21 November 2013

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்:-


கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்:-

புத்துணர்ச்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்துவரும் வழக்கம். தேநீரில் பல வகைகள் காணப்பட்டாலும் அனைவராலும் விரும்பப்படுவது மூன்று வகைகள் ஆகும்.

1. கிரீன் டீ
2. ஊலாங்
3. பிளாக் டீ

கிரீன் டீ “கேமிலியாசைனன்ஸிஸ்” எனப்படும் தாவரத்தின் இலைகளில் இருந்து பெறப்படுகிறது. கிரீன் டீ யில் ஆறுவிதமான பாலிஃபீனால்கள் உள்ளன. அவைகள்.

1. எபிகேட்சின்
2. கேலோகேட்சின்
3. கேட்சின்
4. எபிகேட்சின் கேலட்
5. எபிகேட்சின்கேலோகேட்சின்
6. எபிகேலோ கேட்சின்

மேலும் கேஃபின், தியோபுரோமின், தியாஃபிலின் போன்ற ஆல்கலாய்டுகளும் உள்ளன. இவைகள் மனித உடலுக்கு புத்துணர்ச்சி தருவதுமட்டுமில்லாமல் மனித உயிர்களை காக்கும் சஞ்சீவிகளாக உள்ளன. கிரீன் செய்யும் அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து விஞ்ஞானிகளால் பரிந்துரை செய்யப்படுவது ஆகும்.

கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.

பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.

சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.

எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரீன் டீயின் நன்மைகள்

1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

5. இதய நோய் வராமல் தடுக்கிறது.

6. இதில் உள்ள தியோபிளவின்கள் இரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து குளுகோஸ் வினையை ஊக்கப்படுத்தி ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

7. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

8. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

9. இதில் உள்ள பாலிஃபீனால்கள் புற்று நோய் செல்கள் வளரவிடாமல் அழிக்கிறது. தீங்கிழைக்கும் என்சைம்களின் வளர்ச்சியை தடுத்து ரத்தப்புற்று, நுரையீரல் புற்று, தொண்டை புற்று, வயிறு, குடல், ஈரல் புற்று மற்றும் மார்பகப்புற்று போன்றவற்றின் தீவிரத்தை குறைக்கிறது.

10. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

11. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.

12. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

13. இதில் உள்ள எபிகேலோ கேட்சின் மூளையின் செயல்திறனை அதிகரித்து நினைவாற்றலை பெருக்குகிறது.

14. சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.

15. முகப்பரு, வறண்ட சருமம், சரும அலர்ஜி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் தருகிறது.

16. இரத்த அழுத்தம், பக்கவாதம் அல்சைமர் போன்றவற்றை தவிர்க்கிறது. எலும்புகள் பலமடையவும் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் செய்கிறது.

16. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

17. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.

18. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.

19.இதில் உள்ள பாலிஃபீனால்கள் மனஇறுக்கத்தை போக்கி மூளையில் ஆல்பா அலைகளை தூண்டிமனதுக்கு அமைதியை தருகிறது.

No comments:

Post a Comment