வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Friday 27 December 2013

கோவில்களில் கொட்டிக் கிடக்கும் - சக்தி ரகசியம் !

கோவில்களில் கொட்டிக் கிடக்கும் - சக்தி ரகசியம் !

 
 
ஓஷோவின் - மறைந்திருக்கும் உண்மைகள் படித்து இருக்கிறீர்களா? 
 
அவர் சொல்லிய ஒரு கருத்தை , உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.  
 
ஒரு பேச்சுக்கு , ஏதோ ஒரு  அசம்பாவிதம்  , ஒரு மூன்றாம் உலக யுத்தம் மாதிரி ஒன்று நடந்து - இந்த உலகில் பேரழிவு நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  நாம் இப்போது உபயோகிக்கும் - (satellite ) செயற்கைக்கோள்கள் எல்லாம் ஸ்தம்பித்துப் போய்விட்டது. செயல் இழந்து விட்டது.. உலகமே 90 %  அழிந்துவிட்டது. பெட்ரோல் எல்லாம் காலி. மின் உற்பத்தியே இல்லை .
உலகமே கற்காலம் போல் ஆகி விட்டது .. மக்கள் கோடிக்கணக்கில் மடிந்து விட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் - மீதி இருக்கும் மக்கள் மன நிலை எப்படி இருக்கும்.. ? 

டிவி, கம்ப்யூட்டர், கார், ரேடியோ, மொபைல் போன்,  - எல்லாமே வேலை செய்யாது.. வெறுமனே டப்பா.. தான். பொம்மை மாதிரி தான். ஒன்னும் பிரயோஜனப் படாது .... இல்லையா? ஆனால், அதே சமயத்தில் - அதை உபயோகித்தவர்கள் - வெளியிலும் தூக்கி எறிய மாட்டார்கள்.. அது பாட்டுக்கு - வீட்டிலே இருக்கும். பரண் லே இருக்கும். ஊர்லே மூலையிலே இருக்கும்..  அடுத்த அடுத்த சந்ததிக்கு - அதோட பலன் தெரிய வந்தா பரவா இல்லை.. இல்லை நாளடைவிலே .. அப்படியே மறைஞ்சு போயிடும்.. திரும்ப என்னைக்கவாது ஒரு நாள், எத்தனையோ வருஷம் கழிச்சு - திரும்ப satellites கண்டுபிடிச்சா, எண்ணைக் கிணறு கண்டு பிடிச்சா  - இது எல்லாமே ,  திரும்ப உபயோகப்படும்.. ..

ஒத்துக்கிறீங்களா?
 
இதே மாதிரி தான்.. கோவில் ஒரு செல்போன் டவர் மாதிரி. கடவுள் ஒரு விண்ணில் இருக்கும் கோள் மாதிரி கற்பனை பண்ணிக்குவோம்.. அங்கே இருந்து சிக்னல் வாங்கி உங்களுக்கு தர்ற டவர் தான் ஆலயங்கள். ஜீவ  சமாதிகள்.. அதன் மூலமா எத்தனை எத்தனையோ ஆத்மாக்கள் பலன் அடைஞ்சு இருக்கலாம்.. அந்த கதிர் activation பலமா இருக்கிற ஆலயங்கள் இன்னும் இருக்கு. நீங்க - ஒரு மொபைல் போன் மாதிரி. நீங்க அந்த டவர்க் கிட்டே  எவ்வளவுக் கெவ்வளவு நெருக்கமா இருக்கிறீங்களோ, அந்த அளவு சிக்னல் கிளீயரா இருக்கும். அதனாலே பலனும் இருக்கும். இல்லை , சிக்னல் கிடைக்காது.. நாட் ரீச்சபிள் தான்.

அந்த ஆலயங்களுக்கு - சார்ஜ் பண்றதுக்கு தான் - கும்பாபிஷேகம் - அந்த கும்பம் இறைவனிடம் இருந்து - கதிர் அலைகளை , உள்ளே இருக்கிற கர்ப்ப கிரகத்துக்கு அனுப்புகிறது.. தீப ஆராதனை காட்டுறப்போ - அது இன்னும் தூண்டப்படும்.. அருள் அலைகள் உள்ளே இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும்.. கையை மேலே தூக்கி - அந்த நேரத்திலே வேண்டுவாங்க... இல்லையா? .. உயரமா இருக்கிற அந்த கைவிரல்கள் மூலம் உள்ளுக்குள்  அந்த அலைகள் உங்களுக்குள் இறங்கும்..

இதைப் போலே - ஏராளமான விஷயங்கள் , நம்மை அறியாமலே , நாம் செய்து கொண்டு தான் இருக்கிறோம்..அதற்கு விளக்கம் தான் தெரிவது இல்லை.. ஆனால் தொடர்ந்து செய்கிறோம்.. அதன் முழு பலன்களும், கண்டிப்பாக , நாம் உணரும் பொது தான் தெரிய வரும்..

satellite இருக்கு (ஆண்டவன் ) . செல் போன் டவர் (ஆலயம் ) இருக்கு. செல் போனும்  ( நாம் தான் ), சிம் கார்டும்  (மனசு)   இருக்கு. ஆனாலும், நமக்கு செல் போன் உபயோகம் தெரிஞ்சா தானே .. அதை உபயோகப் படுத்த முடியும்.. இல்லை , வெறுமனே பொம்மை தானே.

அதைப் போலே , பொம்மை மாதிரி தான் .. நாம் இருக்கிறோம்.. நம்மை உணரனும்.. இறையை உணரனும்.. பிறகு , நமக்கு எல்லாமே புரிய வரும்.. 
 
அதுவரை - சிக்னல் கிடைக்கவே வாய்ப்பு இல்லாத - பொம்மை தான் மனிதர்கள்..

இந்த கோட்பாடுகளை - தெளிவாக உணர்ந்து ,  நாம் நம்மை உணரும் வரை ... நமது சக்தி தெரியாதவர்கள் தான்.. மனம் என்னும் சாவி கொடுக்கும் , விசையால் சொடுக்கப்பட்டு நடமாடும் வெறும் பொம்மைகள். 

 நாம் காலை எழுந்தது முதல், இரவு வரையில், எத்தனையோ இடங்களுக்கு போகிறோம். இவைகளோடு, கோவிலுக்கு போவது என்ற பழக்கத்தையும் வைத்துக் கொள்வது நல்லது. பகல் முழுவதும் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் அலை மோதுகிறது. 
அதனால், தினமும் ஒரு முறையாவது, கோவிலுக்குச் சென்று வர வேண்டும். பிறருக்காக உழைக்கிறோம்; சம்பாதித்து போடுகிறோம்; குடும்பத்தை கவனிக்கிறோம். இதெல்லாம் ஒரு கடமை. அதேபோல தன் நன்மைக்கும், ஆத்ம லாபத்துக்கும், பரலோக சுகத்துக்கும் சுலபமான வழி, பகவானை வழிபடுவது தான்.
 
“பகவான் தான் எங்கும் இருக்கிறாரே… கோவிலுக்கு ஏன் போக வேண்டும்? வீட்டிலிருந்து கொண்டே அவரை நினைத்தால் போதாதா?’ என்று வேதாந்தம் பேசுவதில், பிரயோஜனமில்லை. 
 
 பூமியின் அடியில் எங்கும் நீர் நிறைந்துள்ளது; ஆனால், நமக்கு தண்ணீர் வேண்டுமானால், ஒரு கிணற்றிலிருந்தோ, குளத்திலிருந்தோ தான் எடுக்க வேண்டியுள்ளது. 
 
 பசுவின் மடியில் பால் உள்ளது. பால் வேண்டுமானால், அதன் மடியிலிருந்து தான் பால் கறக்க முடியும்; அதன் கொம்பை திருகினால், பால் வருமா? அதுபோல எங்கும் கடவுள் இருக்கிறார் என்றாலும், நாம் நாலு பக்கமும் சுற்றி, சுற்றிப் பார்த்தாலும், கடவுளைக் கண்டோம் என்று சொல்ல முடியாது. 
 
 கோவிலுக்குப் போய், கடவுளை தரிசித்தால் தான், மன நிம்மதி கிடைக்கும். கோவிலுக்குள் உள்ள தெய்வம் வெறும் சிலையல்ல; அது மந்திர பூர்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, தெய்வ சாந்நித்யம் கொண்டது. கண்ணுக்கு தெரியாத கடவுளை, அந்த விக்ரகத்தில் ஆவாகனம் செய்து வைத்திருக்கின்றனர்.
 
 அதற்கு காலா காலத்தில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, தூப தீப நைவேத்தியம், கற்பூர ஆரத்தி என்று வரிசையாக உபசாரங்கள் உள்ளன. இது, ஒவ்வொரு நாளும் ஆறு காலம், நான்கு காலம், மூன்று காலம் என்று நியமனம் செய்து, அதன்படி நடந்து வருகிறது. அதனால், ஏதாவது ஒரு கால பூஜையையாவது பார்த்து, தரிசனம் செய்து வருவது நல்லது. 
 
சிந்து சமவெளி நாகரிகம் - என்று , தொல் பொருள் துறையினர் - சுமார் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன் இருந்த, ஒரு நாகரீகம் மிக்க மனிதர்கள் வாழ்ந்து இருக்கக் கூடும் என்று நிருபித்து இருக்கின்றனர்.. யோசித்துப் பாருங்கள்.. அப்படிப் பட்ட ஒரு உலகம், ஏதோ ஒரு காரணத்தால் - கிட்டத் தட்ட ஒட்டு மொத்தமாக அழிந்து இருக்கிறது.. 
 
 அதன் பிறகு - கொஞ்சம் கொஞ்சமாக , ஒரு இரண்டாயிரம வருடமாக , ஒரு வரலாறு - ஓரளவுக்கு தெரிந்து இருக்கிறது.. எந்த காலத்தில் இருந்தோ, நமது முன்னோர்களில் ஒருவர் , இந்த ஆலயங்களின் பயன்பாடுகள் தெரிந்து , அவர் சந்ததிக்கு சொல்லி , அதில் ஒரு 0 .0000001 % கருத்து உண்மையாய் இருந்ததால் , இன்றும் ஆலயங்கள், வழிபாடுகள், தியானங்கள்  கடை பிடிக்கப்பட்டு வருகின்றன.. 
 
 எதுவும் கேலிப் பொருள் அல்ல.  அதை உணர நமக்கு நேரம் ஆகலாம்.
 
  பூமி அந்தரத்தில், ஏதோ ஒரு விசைக்கு கட்டுப் பட்டு - ஒரு குறிப்பிட்ட சாய்வில் - பந்து போல  , தானும் சுற்றிக் கொண்டு - ஒரு குறிப்பிட்ட பாதையில் - பயணித்துக் கொண்டும் இருக்கிறது...
 
 ஒரு மேஜை இருந்தால்,  அதை செய்த ஒரு தச்சர் இருந்து தானே ஆக வேண்டும் . பூமி, சூரியன் , பிற கோள்கள் என்று இருந்தால் - அதைப் படைத்தவர் , ஒரு சக்தி இருந்து தானே ஆக வேண்டும்.. அந்த சக்தி , எந்த சக்திக்கு கட்டுப்பட்டு - இந்த பிரபஞ்சம் இயங்குகிறதோ, அந்த சக்தி -  கோடி சமுத்திரம் போன்றது.. அந்த சக்திக் கடலில் இருந்து, தெறித்த துளிகள் போல இயங்குபவை தான் உலகமும், நாமும்... நாமும் நம்மை உணரும் போது , அந்த சமுத்திரத்தில் நமது ஐக்கியம் புரிய வரும்..
 
இப்படி ஏராளமான ரகசியங்களை, சக்தியை உள்ளடக்கி இருப்பவை தான் , சதுரகிரி, திருவண்ணாமலை, திருப்பதி, பழனி போன்ற மலைகளும், இதைப் போன்ற பிற ஆலயங்களும்...!!   மன நிம்மதி உங்களுக்கு கிடைப்பது உறுதி. 
 
இந்த கட்டுரையை படிக்கும் அன்பர்களில் யாரேனும் ஒருத்தருக்காவது , ஒரு சிறிய ஆன்மீக அதிர்வு ஏற்பட்டால், நமது இணைய தளத்தின், இந்த கட்டுரையை பிரசுரித்ததன் நோக்கம் நிறைவேறும்.

ஆய கலைகள் அறுபத்து நான்கின் பட்டியல்...!

ஆய கலைகள் அறுபத்து நான்கின் பட்டியல்...!

இலக்கம் கலை
1. அக்கர இலக்கணம்
2. லிகிதம் (இலிகிதம்)
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாஸ்திரம்
8. சோதிடம்
9. தரும சாஸ்திரம்
10. யோகம்
11. மந்திரம்
12. சகுனம்
13. சிற்பம்
14. வைத்தியம்
15. உருவ சாஸ்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுர பாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்த பிரமம்
23. வீணை
24. வேனு
25. மிருதங்கம்
26. தாளம்
27. அகத்திர பரீட்சை
28. கனக பரீட்சை
29. இரத பரீட்சை
30. கஜ பரீட்சை
31. அசுவ பரீட்சை
32. இரத்தின பரீட்சை
33. பூ பரீட்சை
34. சங்கிராம இலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகர்ஷணம்
37. உச்சாடணம்
38. வித்து வேஷணம்
39. மதன சாஸ்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. இரசவாதம்
43. காந்தர்வ விவாதம்
44. பைபீல வாதம்
45. தாது வாதம்
46. கெளுத்துக வாதம்
47. காருடம்
48. நட்டம்
49. முட்டி
50. ஆகாய பிரவேசம்
51. ஆகாய கமனம்
52. பரகாயப் பிரவேசம்
53. அதிரிச்யம்
54. இந்திர ஜாலம்
55. மகேந்திர ஜாலம்
56. அக்னி ஸ்தம்பம்
57. ஜல ஸ்தம்பம்
58. வாயு ஸ்தம்பம்
59. திட்டி ஸ்தம்பம்
60. வாக்கு ஸ்தம்பம்
61. சுக்கில ஸ்தம்பம்
62. கன்ன ஸ்தம்பம்
63. கட்க ஸ்தம்பம்
64. அவத்தை பிரயோகம்

......................
ஆய கலைகள் அறுபத்து நான்கின் பட்டியல் விளக்கம் .....
..................
1. அக்கரவிலக்கணம் எழுத்திலக்கணம்
2. இலிகிதம் எழுத்தாற்றல்
3. கணிதம் கணிதவியல்
4. வேதம் மறை நூல்
5. புராணம் தொன்மம்
6. வியாகரணம் இலக்கணவியல்
7. நீதி சாஸ்திரம் நய நூல்
8. ஜோதிடம் கணியக் கலை
9. தர்ம சாஸ்திரம் அறத்துப் பால்
10. யோக சாஸ்திரம் ஓகக் கலை
11. மந்திர சாஸ்திரம் மந்திரக் கலை
12. சகுன சாஸ்திரம் நிமித்தகக் கலை
13. சிற்ப சாஸ்திரம் கம்மியக் கலை
14.வைத்தியசாஸ்திரம் மருத்துவக் கலை
15. உருவ சாஸ்திரம் உறுப்பமைவு
16. இதிகாசம் மறவனப்பு
17. காவியம் வனப்பு
18. அலங்காரம் அணி இயல்
19. மதுர பாடனம் இனிதுமொழிதல்
20. நாடகம் நாடகக் கலை
21. நிருத்தம் ஆடற் கலை
22. சத்தப்பிரும்மம் ஒலிநுட்ப அறிவு
23. வீணை யாழ் இயல்
24. வேணு (புல்லாங்குழல்)குழலிசை
25. மிருதங்கம் (மத்தளம்)
26. தாளம் தாள இயல்
27. அத்திரப் பரிட்சை வில்லாற்றல்
28. கனகப் பரிட்சை (பொன் நோட்டம்)
29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம் )
30. கஜப் பரிட்சை (யானை எற்றம்)
31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்)
32. இரத்தினப் பரிட்சை மணி நோட்டம்
33. பூமிப் பரிட்சை மண்ணியல்
34. சங்கிராம விலக்கணம் போர்ப் பயிற்சி
35. மல்யுத்தம் கைகலப்பு
36. ஆகருடனம் (ஆகர்ஷணம்)கவர்ச்சியியல்
37. உச்சாடனம் ஓட்டுகை
38. வித்து வேடனம் (நட்பு பிரிக்கை)
39. மதன சாஸ்திரம் மதன கலை
40. மோகனம் மயக்குக் கலை
41. வசீகரணம் வசியக் கலை
42. இரசவாதம் இதளியக் கலை
43. காந்தருவ வாதம் (இன்னிசைப் பயிற்சி)
44. பைபீலவாதம் (பிறவுயிர்மொழி)
45. கவுத்துவ வாதம் மகிழுறுத்தம்
46. தாதுவாதம் ( நாடி சாஸ்திரம்)
47. காருடம் கலுழம்
48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது இழப்பறிகை)
49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்;மறைத்ததையறிதல்)
50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்--வான் செல்கை)
51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது--வான்புகுதல்)
53. அதிரிசியம் தன்னுறு கரத்தல்
54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55. மகேந்திர ஜாலம் பெருமாயம்
56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்--அழற் கட்டு)
57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)
58. வாயுஸ்தம்பம் வளிக் கட்டு
59. திட்டி ஸ்தம்பம் கண் கட்டு
60. வாக்கு ஸ்தம்பம் நாவுக் கட்டு
61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடக்கல்)
62. கன்னத்தம்பம் புதையற் கட்டு
63. கட்கத்தம்பம் வாட் கட்டு
64. அவத்தைப் பிரயோகம் சூனியம்.

Sunday 8 December 2013

கீரை இல்லா சமையல் வேண்டாமே!

“காய்கறிகள் வாங்கச் செல்லும் நம்மை முதலில் கவர்ந்து இழுப்பது பச்சைப்பசேல் கீரைகள்தான். கீரை வளர்ப்பது மிக எளிது. மிகக்குறுகிய காலத்தில் அறுவடை செய்து விற்பனை செய்துவிடலாம். இதில் ஓர் அதிர்ச்சிச் செய்தியும் உண்டு. தமிழகத்தின் பல புறநகர் பகுதிகளில், கழிவுநீரில் சுகாதாரமே இல்லாமல் கீரை வளர்த்து, விற்பனை செய்து காசு பார்க்கிறார்கள்.

இதனால், நன்மை செய்ய வேண்டிய கீரையே பல நேரங்களில் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை போன்ற பாதகங்களை ஏற்படுத்தி விடுகின்றன. இப்பிரச்னையைத் தவிர்க்கும் வகையில், கீரைகளை நம் வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம். தானியக்கீரை போன்றவற்றை பெரிய பைகள் அல்லது தொட்டிகளிலும், அரைக்கீரை போன்றவற்றை கீரை படுகைகளிலும், பாலக் கீரையை உயரமான பைகளிலும் வளர்க்கலாம்.

கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சிறிய பைகளில் வளர்க்கலாம். கீரை விதைகளை நர்சரியில் வாங்கி விதைக்கலாம். அதிகபட்சம் 15 தினங்களில் கூட அறுவடை செய்யும் கீரை வகைகள் உள்ளன. உயிர்ச் சத்தான வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவு பச்சைக்கீரை வகைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், இவை தொற்றுநோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது. அதனால் கீரை ‘பாதுகாக்கும் உணவு’ (Protective Food) என்றழைக்கப்படுகிறது.

தமிழ் ப்ளாக் மூலம் சம்பாதிக்க...

தமிழ் ப்ளாக் மூலம் சம்பாதிக்க...


வலைப்பதிவர்கள் பலருக்கு தங்கள் ப்ளாக் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ப்ளாக் மூலம் சம்பாதிக்க கூகுளின் ஆட்சென்ஸ் (Google Adsense) நமக்கு உதவுகிறது. ஆனால் தமிழ் தளங்களுக்கு ஆட்சென்ஸ் மூலம் விளம்பரம் வைக்க அனுமதி இல்லை.

இதற்கு மாற்றாக தமிழ் தளங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள விளம்பர இணையத்தளம் Ad30days.in

உங்கள் ப்ளாக்கில் விளம்பரம் வைக்க விரும்பினால் இங்கே க்ளிக் செய்து புதிய கணக்கை உருவாக்கவும்.


பிறகு இடதுபுறம் Add New Site என்பதை க்ளிக் செய்யுங்கள்.

உங்கள் ப்ளாக் பற்றிய விவரங்களை கொடுக்கவும்


பிறகு உங்கள் ப்ளாக் தொடர்பான குறிச்சொற்களை கொடுங்கள்


பிறகு Banner Ads என்பதில் டிக் இருக்கும். Next என்பதை க்ளிக் செய்யுங்கள்


பிறகு Banner Setting என்பதில் உங்களுக்கு எந்த அளவு விளம்பர படம் வேண்டுமோ அதை க்ளிக் செய்து Next க்ளிக் செய்யுங்கள்


பிறகு விளம்பர படத்தின் நிறத்தை தேர்ந்தெடுத்து Next க்ளிக் செய்யுங்கள்

Default Ad setting என்பதில் எதுவும் செய்யாமல் Next க்ளிக் செய்யுங்கள்

நீங்கள் வைக்க வேண்டிய விளம்பரத்தின் நிரல் கிடைக்கும்.


இந்த நிரலை காப்பி செய்து உங்கள் ப்ளாக்கில் Add a Gadget மூலம் இணைக்கலாம். அந்த விளம்பரத்தை க்ளிக் செய்யப்படுவதைப் பொறுத்து வருமானம் கிடைக்கும்.

குறைந்தபட்சம் ஐந்து டாலர் வந்ததும் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
என் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:


Yoga /யோகப் பயிற்சி


சுவாசக் கோளாறுகள், இரைப்பை கோளாறுகள் நீங்க – உஷ்ட்ராசனம் உஷ்ட்ராசனம்- ஒட்டகம் போன்று உள்ளதால் இந்த பெயர் ஏற்பட்டது.
செய்முறை:
1. விரிப்பின் மீது மண்டியிட்டு நிற்கவும். பாத விரல்கள் வெளி நோக்கி இருக்க வேண்டும்.
2. முட்டி, பாதங்கள் சிறிது இடைவெளி விட்டு அகட்டி வைக்கவும்.
3. இடுப்பில் கையை வைத்து பின்னோக்கி வளைய வேண்டும்.
பலன்கள்:
முதுகுத் தண்டின் வளையும் தன்மை அதிகரிக்கிறது. முதுகு வலி, சுவாசக் கோளாறுகள், இரைப்பை கோளாறுகள் நீங்குகின்றன. தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
சுவாசக் கோளாறுகள், இரைப்பை கோளாறுகள் நீங்க - உஷ்ட்ராசனம்</p>
<p>உஷ்ட்ராசனம்- ஒட்டகம் போன்று உள்ளதால் இந்த பெயர் ஏற்பட்டது.</p>
<p>செய்முறை:</p>
<p>1. விரிப்பின் மீது மண்டியிட்டு நிற்கவும். பாத விரல்கள் வெளி நோக்கி இருக்க வேண்டும்.<br />
2. முட்டி, பாதங்கள் சிறிது இடைவெளி விட்டு அகட்டி வைக்கவும்.<br />
3. இடுப்பில் கையை வைத்து பின்னோக்கி வளைய வேண்டும். </p>
<p>பலன்கள்:</p>
<p>முதுகுத் தண்டின் வளையும் தன்மை அதிகரிக்கிறது. முதுகு வலி, சுவாசக் கோளாறுகள், இரைப்பை கோளாறுகள் நீங்குகின்றன. தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

தமிழும் சித்தர்களும் வரலாறு

வரலாறு

தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள்..சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.
செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே

இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது.
இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப
இதன் பொருளைப் பாருங்கள்! விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.
“எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்” என்று திருத்தக்க தேவரின் “சீவக சிந்தாமணி” சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.
கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.
மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.
விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.
இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதானே!
தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள்..</p><br /><br />
<p>சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.</p><br /><br />
<p>சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.</p><br /><br />
<p>செஞ் ஞாயிற்றுச் செலவும்<br /><br /><br />
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்<br /><br /><br />
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்<br /><br /><br />
வளி திரிதரு திசையும்<br /><br /><br />
வறிது நிலைஇய காயமும்<br /><br /><br />
என்றிவை<br /><br /><br />
சென்று அளந்து அறிந்தார் போல<br /><br /><br />
என்றும் இனைத்து என்போரும் உளரே</p><br /><br />
<p>இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது.</p><br /><br />
<p>இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.</p><br /><br />
<p>புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்<br /><br /><br />
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப</p><br /><br />
<p>இதன் பொருளைப் பாருங்கள்! விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.</p><br /><br />
<p>"எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்" என்று திருத்தக்க தேவரின் "சீவக சிந்தாமணி" சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.</p><br /><br />
<p>கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.</p><br /><br />
<p>மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து<br /><br /><br />
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த<br /><br /><br />
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி<br /><br /><br />
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.</p><br /><br />
<p>விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.</p><br /><br />
<p>இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதானே!

கொரிய இளவரசி தமிழச்சி :
கி.மு 48ஆம் காலகட்டத்தில் இந்தியாவை சேர்ந்த 16 வயதான பேரழகி தன் கனவில் கண்ட இளவரசனை காதலித்து அவரை திருமணம் செய்துகொள்ள எண்ணினாள். அவளின் ஆசை படி அந்த பெண்ணை அவள் பெற்றோர்கள் மரக்கலத்தில் ஏற்றி கொரியா அனுப்பிவைக்க அவள் கொரியாவையும் அந்நாட்டு மன்னரையும் அடைந்தாள்.
இளவரசியின் சொந்த ஊர் ‘ஆயுத்த’ அல்லது ‘ஆயித்த’ என்றும் சொல்கிறார்கள். அந்த பெயர் அயோத்தி என்ற பெயரை ஒத்து இருப்பதால் ஆயித்தி தான் அவரின் பூர்வீகம் என்றும் கருதப்படுகிறது.
அந்த இளவரசியில் பெயர் ஹியோ ஹவாங் ஒக்கே.
ஹியோ ஹவாங் ஒக்கே இளவரசி ஒரு தமிழ் பெண் என்றவுடம் அதை நம்ப மனம் மறுத்தது. பின்பு மெல்ல மெல்ல நம்பத்தொடங்கினேன் அவர்களில் கலாச்சாரத்தையும் அவர்கள் மொழியையும் பார்த்து.
தமிழகளை போல கொரிய நாட்டினரும் தங்கள் பெற்றோர்களை அம்மா, அப்பா என்று தான் அழைக்கிறார்களாம்.
‘புதியது’ என்பதை ‘புது’ என்கிறார்களாம்.
‘நீ திரும்ப வா’ என்பதை ‘நீ இங்கே பா’ என்கிறார்களாம்.
‘உயரம்’ என்பதை ‘உரம்’ என்கிறார்கள்.
நாம் சொல்லும் அச்சச்சோ! அப்பாடா.. வெல்லாம் அங்கே சகஜமாம்.
அவர்களது உணவு முறையும் தமிழர்களை போல் அரிசி சாதம் தான். ஊறுகாய் இல்லாது உணவே கிடையாது.
இன்று தான் சீன உணவின் தாக்கம் அங்கு ஏற்பட்டுள்ளதாம்.
தமிழர்கள் அமைக்கும் குடிசைகள் போல தான் கொரிய நாட்டினரும் குடிசைகள் அமைப்பார்கலாம்.
தமிழ் இளவரசியின் சமாதி அங்கு இன்னமும் பாதுகாக்கப்பட்டு சுற்றுலா தளமாக உள்ளது.
அதே சமயம் நம் நாட்டை ஆண்ட தமிழ் மன்னர்களின் சமாதிகள் எங்கு போனதென்றே நமக்கு தெரியாது.
தமிழனாக பிறந்ததற்கு பெருமைப்படு, பல சாதனைகள் செய்த தமிழர்களை மறந்துவிடாதே!
கொரிய இளவரசி தமிழச்சி :</p><br /><br /><br /><br />
<p>கி.மு 48ஆம் காலகட்டத்தில் இந்தியாவை சேர்ந்த 16 வயதான பேரழகி தன் கனவில் கண்ட இளவரசனை காதலித்து அவரை திருமணம் செய்துகொள்ள எண்ணினாள். அவளின் ஆசை படி அந்த பெண்ணை அவள் பெற்றோர்கள் மரக்கலத்தில் ஏற்றி கொரியா அனுப்பிவைக்க அவள் கொரியாவையும் அந்நாட்டு மன்னரையும் அடைந்தாள்.</p><br /><br /><br /><br />
<p>இளவரசியின் சொந்த ஊர் 'ஆயுத்த' அல்லது 'ஆயித்த' என்றும் சொல்கிறார்கள். அந்த பெயர் அயோத்தி என்ற பெயரை ஒத்து இருப்பதால் ஆயித்தி தான் அவரின் பூர்வீகம் என்றும் கருதப்படுகிறது.</p><br /><br /><br /><br />
<p>அந்த இளவரசியில் பெயர் ஹியோ ஹவாங் ஒக்கே.</p><br /><br /><br /><br />
<p>ஹியோ ஹவாங் ஒக்கே இளவரசி ஒரு தமிழ் பெண் என்றவுடம் அதை நம்ப மனம் மறுத்தது. பின்பு மெல்ல மெல்ல நம்பத்தொடங்கினேன் அவர்களில் கலாச்சாரத்தையும் அவர்கள் மொழியையும் பார்த்து.<br /><br /><br /><br /><br />
தமிழகளை போல கொரிய நாட்டினரும் தங்கள் பெற்றோர்களை அம்மா, அப்பா என்று தான் அழைக்கிறார்களாம்.</p><br /><br /><br /><br />
<p>'புதியது' என்பதை 'புது' என்கிறார்களாம்.</p><br /><br /><br /><br />
<p>'நீ திரும்ப வா' என்பதை 'நீ இங்கே பா' என்கிறார்களாம்.</p><br /><br /><br /><br />
<p>'உயரம்' என்பதை 'உரம்' என்கிறார்கள்.</p><br /><br /><br /><br />
<p>நாம் சொல்லும் அச்சச்சோ! அப்பாடா.. வெல்லாம் அங்கே சகஜமாம்.</p><br /><br /><br /><br />
<p>அவர்களது உணவு முறையும் தமிழர்களை போல் அரிசி சாதம் தான். ஊறுகாய் இல்லாது உணவே கிடையாது.</p><br /><br /><br /><br />
<p>இன்று தான் சீன உணவின் தாக்கம் அங்கு ஏற்பட்டுள்ளதாம்.</p><br /><br /><br /><br />
<p>தமிழர்கள் அமைக்கும் குடிசைகள் போல தான் கொரிய நாட்டினரும் குடிசைகள் அமைப்பார்கலாம்.</p><br /><br /><br /><br />
<p>தமிழ் இளவரசியின் சமாதி அங்கு இன்னமும் பாதுகாக்கப்பட்டு சுற்றுலா தளமாக உள்ளது.</p><br /><br /><br /><br />
<p>அதே சமயம் நம் நாட்டை ஆண்ட தமிழ் மன்னர்களின் சமாதிகள் எங்கு போனதென்றே நமக்கு தெரியாது.</p><br /><br /><br /><br />
<p>தமிழனாக பிறந்ததற்கு பெருமைப்படு, பல சாதனைகள் செய்த தமிழர்களை மறந்துவிடாதே!
11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம்!!பூம்புகார் – காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும்.சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்கான சந்தையாகவும் இருந்திருகிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரம் பற்றி போற்றுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்துபோனது.இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி நிலையம் பணப்பற்றாக்குறையால் இந்நகரம் பற்றி ஆராய்வதை நிறுத்திவிட்டது. திட்டமிட்டு நிறுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.பூம்புகார் நகரத்தையும், குஜராத்தின் கடற்கரையில் (மும்பைக்கு மேற்கே) இருந்த துவாரக நகரத்தையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்த இங்கிலாந்துக்காரர் கிரகாம் ஹன்காக் (Graham Hancock) ஒரு வீடியோவை (Underworld: Flooded Kingdoms Of The Ice Age) வெளியிட்டார். அதில் கடலுக்கடியில் இந்நகரம் இருந்த இடத்தில் இன்னும் கற்களாலான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்சுவர், பாத்திரங்கள், குதிரைவடிவ பொம்மைகள், காணப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி முடிவுகளெல்லாம் வெளியானது 2002ல். இன்றுவரை அதுபற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை.தமிழர்கள் நாம் நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம்? இனியாவது தமிழக அரசு இந்த ஆராய்ச்சியை முன்னெடுக்குமா?
11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம்!!</p><br /><br /><br /><br /><br />
<p>பூம்புகார் – காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும்.</p><br /><br /><br /><br /><br />
<p>சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்கான சந்தையாகவும் இருந்திருகிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரம் பற்றி போற்றுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்துபோனது.இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி நிலையம் பணப்பற்றாக்குறையால் இந்நகரம் பற்றி ஆராய்வதை நிறுத்திவிட்டது. திட்டமிட்டு நிறுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.</p><br /><br /><br /><br /><br />
<p>பூம்புகார் நகரத்தையும், குஜராத்தின் கடற்கரையில் (மும்பைக்கு மேற்கே) இருந்த துவாரக நகரத்தையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்த இங்கிலாந்துக்காரர் கிரகாம் ஹன்காக் (Graham Hancock) ஒரு வீடியோவை (Underworld: Flooded Kingdoms Of The Ice Age) வெளியிட்டார். அதில் கடலுக்கடியில் இந்நகரம் இருந்த இடத்தில் இன்னும் கற்களாலான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்சுவர், பாத்திரங்கள், குதிரைவடிவ பொம்மைகள், காணப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி முடிவுகளெல்லாம் வெளியானது 2002ல். இன்றுவரை அதுபற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை.</p><br /><br /><br /><br /><br />
<p>தமிழர்கள் நாம் நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம்? இனியாவது தமிழக அரசு இந்த ஆராய்ச்சியை முன்னெடுக்குமா?

தமிழ் நாகரீகம் உலகின் முதல் நாகரீகம்! – ஓர் ஆய்வு!தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக.. எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய நாகரிகரே எகிப்து நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிப்தையே பெருமைபட பேசுகின்றனர்.உலகில் பலருக்கு எதியோபியாவில் பழம் நாகரிகம் இருந்ததே அறியாமல் உள்ளனர். எதியோபிய நாகரிகம் காலத்தால் எகிப்தினும் முற்பட்டது, இதாவது, 9,500 ஆண்டுகள் பழமையுடையதாய் சொல்லப்படுகிறது. இங்கு சிந்து எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மண்டி எனும் ஊரில் கண்டெடுக்கப்பட்டன. இதற்கு பிற்பட்டதே எகிப்தின் எழுத்துகள். நாகரிகத்தில் எதியோபியா எகிப்துக்கு சற்றும் குறைவில்லாதது.எதியோபிய நாகரிக மன்னர் பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர் தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக மன்னர் பெயர்களில் சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது.தமிழோடு ஒத்துள்ள இந்நாகரிக மன்னர் பெயர்களை சிந்துவெளி முத்திரைப் பெயர்களோடும், சங்க இலக்கியப் பெயர்களோடும், பிற நாகரிக மன்னர்தம் தமிழ்ப் பெயரோடும் ஒப்பிட்டு ஆய்கிறது இக்கட்டுரை. இந் நாகரிக மன்னர் பெயர் ஒப்பீடு இந்நாகரிகங்களின் மக்கள் ஒரு குலைக்காய் போல் ஒரு மூல நாகரிகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும், அதோடு அம்மூல தாய் நாகரிகம் தமிழர் உடையது என்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.இவ்வுலகில் எழுத்துகள் சற்றொப்ப 6.500 ஆண்டுகள் அளவில் தோன்றின. அதற்கு முன் எழுத்துகள் கிடையா. தமிழின் காலம் கல்வெட்டு, சங்க இலக்கியச் சான்றுகளின் படி 2,500 ஆண்டுகள் பழமையதாக சொல்லப்படுகின்றது. எதியோபிய மன்னர்தம் தமிழ்ப் பெயர்கள் 6,500ஆண்டுகள் பழமை மிக்கதால் தமிழின் பழமையை 6,500 ஆண்டுகளுக்கு முன் போடலாம், அதோடு எதியோபியாவில் கிடைத்த மட்பாண்டங்கள் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளை முழுதும் ஒத்துள்ளதால் தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக, இதாவது, 10,000 ஆண்டுகள் தொன்மையதாய் கொள்ளலாம்.இப்பெயராய்வு எதியோபிய மன்னர் Tafari Mokonnen 1922 இல் வெளியிட்ட மன்னர் பெயர் பட்டியலை அடிப்படையாகக் கொள்கிறது. ஓரிப் பழங்குடியில் மொத்தரம் 21 பேர் ஆண்டுள்ளனர்.
முதலாமவர் O r i or aram 4530-4470BC – தமிழில் ஓரி என்பது செப்பமான வடிவம். கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்படுபவன் வல் வில் ஓரி என்பான். எனவே ஓரி எனம் பெயர் 6,500 ஆண்டுகள் பழமையது.
Gariak 4470-4404 BC தமிழில் காரி அக் காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். சங்க இலக்கியத்தில் கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக குறிக்கப்படுபவன் மலையமான் திருமுடிக் காரி என்பான். இப்பெயர் கொரிய நாகரிகத்தில் Dangun வழிமரபில் ஒரு மன்னனுக்கு Gareuk 2182-2137 BC என இடப்பட்டுள்ளது. தமிழில் காரி அக் காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். அக்கன் – வடலூர் வட்ட மருங்கூரில் கிடைத்த பிராமி எழுத்து பொறித்த பானைஓட்டில் அதியகன் என்று உள்ளது. இதை அத்தி + அக்கன் என பிரித்து படிக்க வேண்டும். அக் பிற நாகரிகங்களில் அல், ஐ, இ, உ, அம் ஈறு பெற்றும் வரும். தெலுங்கில் அக்கராஜு என்ற வழக்குள்ளது. எகிப்து நாகரிகத்தில் 4, 7 & 8 ஆம் ஆள்குடிகளில் காரி என பெயர் கொண்டோர் பலர்.
Elaryan 4404-3836 BC – தமிழில் எல் அரையன் எனபது செப்பமான் வடிவம். எல் – ஒளி, சிவப்பு ஆகிய பொருள்களை கொண்டது. எல்லன், எல்லப்பன் ஆகிய பெயர்கள் இன்றும் வழங்குகின்றன. மேலை நாடுகளில் எல் வழங்குகிறது. அரயன் – அரசன் எனும் பொருள் உடையது. இப்பெயர் தமிழ் இலக்கியத்தில் பல்லிடங்களில் ஆளப்பட்டுள்ளது
Eylouka 3836 – 3932 BC (QUEEN) – தமிழில் அரசி எயில் அக்கா எழில் அககாள் என செப்பமாக படிக்கலாம். இது ஒரு தூய தமிழ்ச் சொல். பண்டைத் தமிழகத்தில் பெண் அரசுப் பொறுப்பேற்றதற்கான சான்று இல்லா நிலையில் எதியோபியாவில் பெண் ஆள்வதற்கு தடை இருந்ததில்லை என்பதற்கு இவள் சான்று.
Kam 2713 – 2635 BC – தமிழில் காம் காமன் என செப்பமாக படிக்கலாம். காமன் ஒரு தூய தமிழ்ச் சொல் சமஸ்கிருதம் அல்ல. இங்கு அன் ஈறு இல்லாமல் உள்ளது. சிந்துவெளி முத்திரைகளில் காமன் என்ற பெயர் வழங்குகின்றது. 63 நாயன்மாருள் ஒருவர் கலிக் காம நாயனார். அதில் காமன் இடம்பெற்றுள்ளது. சப்பான் நாகரிகத்தல் காம என்ற பெயர் வழங்குகிறது.
Elektron 2515 – 2485 BC – தமிழில் எல்லி கீற்றன் என்பது செப்பமான வழக்கு. எல் இகர ஈறு பெற்றுள்ளது. சீன நாகரிகத்தில் Liao ஆள்குடி அரசனின் இயற்பெயர் Yelu Abaoji 907 -926 AD தமிழில் எல்லு அப்பய்ய தி எல்லு அப்பய்யன் தி என செப்பமாக படிக்கலாம். இங்கு எல் உகர ஈறு பெற்றுள்ளது. அப்பய்யன் – அப்பய்ய தீக்ஷிதர் என்பவர் நாயக்கர் கால அறிஞர். தி – சீனத்தில் வேந்தன் என பொருள் தரும்.
Manturay 2180- 2145 BC – தமிழில் மாந்தரை என்பது செப்ப வடிவம். ஐகார ஈறு பெற்றுள்ளது. மாந்தரன் சேரர்க்குரிய பெயர். எதியோபிய நாகரிகத்தில் சேரர் ஆட்சி எற்பட்டதற்கான முதல் சான்று. மாந்தர – மாஞ்சர என மருவி நடு ஆப்பிரிக்காவில் கிளிமாஞ்சரோ என்ற மலைக் காட்டிற்கு பெயராக வழங்குகிறது.
Azagan 2085 – 2055 BC – தமிழில் அழகன் என்பது செப்பமான வடிவம். தமிழுக்கே சிறப்பான ழகரமும் அன் ஈறும் இடம் பெற்றுள்ளன. அழகப்பன், அன்பழகன் ஆகியன இன்றும் வழங்கும் தமிழ்ப பெயர்கள்.
Ramen Phate 2020-2000 BC – தமிழில் இராமன் வட்டி என்பது செப்பமான தமிழ் வடிவம். இங்கு வகரம் பகரமாக திரிந்துள்ளது. இராமன் ஒரு தூய தமிழ்ச் சொல். வால்மீகி இராமாயணத்திற்கு முன்பே சங்க இலக்கியங்களில் பயின்று வருகிறது. எகிப்து மன்னர் பலர் இப்பெயர் கொண்டுள்ளனர்.
Ramesses I 1295-1294 BC – தமிழில் இராமி சே இராமி சேயன் என செப்பமாக படிக்கலாம். இராமன் இகர ஈறு பெற்றுள்ளது. சேயன் – சிந்து வெளி முத்திரைகளில் பரவலாக அன் ஈறு பெற்றும், பெறாமல் சேய் என்றும், இன்னம் குறுக்கமாக சே என்றும் வழங்குகிறது.
Wan Una 2000 BC – தமிழில் வண் உன்ன வண்ணன் உன்னன் என செப்பமாக படிக்கலாம். வண்ணன் – சிந்து வெளி முத்திரைகளில் வழங்கும் பெயர். சீன நாகரிகத்தில் மேற்கு Han ஆள்குடி அரசர் ஒருவர் பெயர் Liu Bang 206 -195 BC – தமிழில் ஒளிய பண் > ஒளியன் வண்ணன் என செப்பமாக படிக்கலாம். வ- ப திரிபு. சீன மொழியில் ன்>ங் என மூக்கொலி பெறும். சிந்து வெளியில் ஒளியன் என்ற பெயர் அருகி வழங்குகிறது. உன்னன் – தமிழக சிந்து எழுத்து பானைஓடுகளில் பொறிக்கப்பட்ட பெயர். இகர ஈறு பெற்று உன்னி என்றும் ஆகும். இது உன்னி சேரநாட்டு வழக்கு. எகிபது நாகரிகத்தில் 5 ஆம் ஆள்குடி மன்னன் ஒருவன் பெயர் Unas 2375 -2345 BC – தமிழில் உன்ன > உன்னன் என செப்பமாக படிக்கலாம்.
Piori 2000 – 1985 BC – தமிழில் பய் ஓரி > வய் ஓரி > வய்யன் ஓரி என செப்பமாக படிக்கலாம். வய் – வெம்மை, வைதல் என்பதன் வேர், வய்யன் – சிந்து வெளியில் வழங்குகிறது, செங்கல்பட்டு அருகே வய்யா/வையா ஊர் என ஓர் ஊர் உள்ளது. இது சீன நாகரிகத்தில் Xi, Bi என திரிந்து பேரளவில் வழங்குகிறது.
Kosi Yope (queen) 1871 – 1890 BC – தமிழில் அரசி காதி யாப்பி > காத்தி யாப்பி என செப்பமாக படிக்கலாம். தகரம் சகர இன ஒலியான ஸகரமாக திரிந்துள்ளது. காத்தி – தமிழக ஊர்புறங்களில் பெண் பெயராக வழங்குகிறது. ஆண் பால் பெயரான காத்தன் சிந்து வெளி முத்திரைகளில் வழங்குகிறது, அங்கு ஒரு பெண் பால் பெயர் கூட காணப்படவில்லை. யாப்பி – இது ஒரு முது பழந்தமிழ்ச் சொல். ஆண் பால் பெயர் யாப்பன் என்பது.
Etiyopus I 1856 – 1800 BC – தமிழில் எட்டி யாப்ப > எட்டி யாப்பன் என செப்பமாக படிக்கலாம். எட்டி – வணிகர்க்கு உயர்ந்தோன் எனும் பொருளில் பட்டமாக அளிக்க பட்டது. எட்டியப்பன் இன்றும் தமிழகத்தில் வழங்குகிறது. யாப்பன் – ஒரு பழந்தமிழ் பெயர். தென் அமெரிக்க இன்கா நாகரிகத்தல் ஒருமன்னன் பெயர் . Pachacutec Inca Yupanqui 1438 – 1471 AD .- தமிழில் பச்சகுடி யாப்அங்கை > பச்சைகுடி யாப்பன் அங்கை என செப்பமாக படிக்கலாம். அஙகன் அங்கு ஆகிய பெயர்கள் சிந்து வெளி முத்திரையில் வழங்குகின்றன. அங்கப்பன், அங்கையன் இன்றும் தமிழக்த்தில் வழங்கும் பெயர்கள். இன்கா, மாயன் நாகரிகங்களும் தமிழர் நாகரிகங்களே.
Lakndun Nowarari. தமிழில் இள கந்தன் நவ்வர் அரி என்பது செப்பமான வடிவம். இள – இளமைப் பொருள். சங்க இலக்கியங்களில் இளங்குமணன், இளஞ் சேன்(ட்) சென்னி என வழங்குகிறது. ஐரோப்பாவில் படை நடத்திய Huna மன்னன் அத்திளா > அத்தி+இள எனபான். சிந்துவெளி முத்திரையில் அத்திள வழங்குகிறது. கந்தன் – சிந்துவெளி முத்திரையில் அருகி வழங்குகிறது. இகர ஈறு பெற்று கந்தி எனவும் ஆகும். புகார் நகரின் அக ஊர் ஒன்றுக்கு பெயர் காகந்திபுரம். நவ்வன் – சிந்துவெளி முத்திரையிலும், தமிழக பானைஓட்டு சிந்து எழுத்திலும் காணப்படுகிறது. இங்கு அர் ஈறு பெற்றுள்ளது. அரி > அரியா இன்றும் தமிழகத்தில் வழங்கும் பெயர். புதுச்சேரியின் ஓர் ஊர் அரியான்குப்பம் > அரியாங்குப்பம்.
Senuka I 1700 -1683 BC – தமிழில் சேன் உக்க > சேனன் உக்கன் என செப்பமாக படிக்கலாம். சேனன் – சிந்து வெளிப் பெயர். இளஞ் சேன்(ட்) சென்னியில் பயில்கின்றது. உக்கன் – சிந்து வெளி முத்திரைப் பெயர் 5,300 ஆண்டு சிந்து மட் பாண்டத்தில் உக்கங்கு என பொறிக்கப்பட்டுள்ளது. Aktis Sanis 1531 BC – தமிழில் அஃகுதி சாணி > அஃகுதை சாணன் என செப்பமாக படிக்கலாம். அஃகுதை – சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் பெயர். சாணன் – இகர ஈறு பெற்று சாணி ஆகியது. யகர சகர திரிபில் யாணன் > சாணன் ஆகும். யாணனும் சாணனும் சிந்து முத்திரைப் பெயர்கள். சீனத்தில் Yang உண்டு.
Mandes 1531 – 1514 BC – தமிழில் மாந்தி என்பது செப்பமான வடிவம். உகர ஈறு பெற்று மாந்து எனவும், ஐகாரம் பெற்று மாந்தை எனவும் ஆகும். மாந்தரன் > மாந்து + அரன் ஒரு சேரப் பெயர். மாந்தை சேரர் நகரம்.
Amoy 1481 -1460 BC – தமிழல் ஆமை > ஆமன் இதன் செப்பமான வடிவம். யா > ஆ திரிபு, யானை – ஆனை, யாந்தை – ஆந்தை போல் யாமன் ஆமனாக திரிந்தது. ஐகார ஈறு பெற்று ஆமை ஆனது. குட்டாமன் – குட்டை+ஆமன் கேரளத்தில் இன்றும் வழங்குகிறது. முட்டத்து ஆமக் கண்ணியார் > முடதாமக்கண்ணியார் பெண் புலவர்.
இசுரேலின் யூதேய அரசன் பெயர் Amon 642-640 BC . Titon Satiyo 1256 – 1246 BC – தமிழில் திட்டன் சாத்தைய > திட்டன் சாத்தையன் என செப்பமாக படிக்கலாம். திட்டன் – திட்டன் குடி > திட்டக்குடி ஓர் தமிழக ஊர். கார்தேஜ் நாகரிக அரசியின் பெயர் Dido 814 BC. காசுமீர அரசிப் பெயர் Dida 958 AD.அரசிகளின் பெயர்கள் கடுஒலி பெற்றுள்ளன. சாத்தன் + அய்யன் ஒரு கூட்டுப் பெயர். சாத்தன் – சிந்து வெளி முத்திரைப் பெயர். சாத்தப்பன் இன்று வழங்கும் பெயர். கொரிய நாகரிக Danjun வழிவந்த மன்னன் பெயர் sotae 1357 -1285 BC.சாத்தை > ஐகார ஈறு பெற்றுள்ளது.
Sanuka 1231 – 1226 BC – தமிழில் சாண் உக்க > சாணன் உக்கன் என செப்பமாக படிக்கலாம். யகர சகர திரிபில் யாணன் சாணன் என திரிந்தது. சாணன் உக்கன் சிந்து வெளிப் பெயர்கள். ஈரானின் ஈலம் நாகரிக மன்னன் பெயர் .Ukku-Tanish 2500 BC என்பது . பாபிலோன் மன்னன் பெயர் Nabu Suma Ukin II 732 BC. சீன நாகரிகத்தில் Shang ஆள்குடி மன்னன் கோவில் பெயர் Tai Zang 1600 BC தமிழில் தாய் சாண் என்பது. சீனத்தில் ன்>ங் என மூக்கொலி பெறும்.
Wiyankihi I 1140 – 1131 BC – தமிழில் வய்யங்கி > வய்யன்+ அங்கி என செப்பமாக படிக்கலாம். சங்க இலக்கியத்தில் ஒரு மன்னன் பெயர் வய் ஆவி என்பது. சீன நாகரிகத்தில் shang ஆள்குடியில் ஒரு மன்னனுடைய இயற்பெயர் Bian 1600 BC. அதே ஆள்குடியில் இன்னொரு மன்னனுக்கு ஆட்சிப் பெயர் Xiao xin 1300 – 1251 BC – தமிழில் வய்ய வய்யன் என்பது. சீனத்தில் வய் > Xi என்றும் Bi என்றும் திரிந்துள்ளது.
Ramenkoperm 1057 -1043 BC – தமிழில் இராமன் கோப்பெரும் என்பது செப்பமான வடிவம். கோப்பெரும் பெண்டு சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் பெண் பெயர். சோழன் ஒருவன் கோப்பெருஞ் சோழன் எனப்பட்டான்.
Pino stem 1073 BC – தமிழில் பிண்ண சேம் > விண்ணன் சேமன் என செப்பமாக படிக்கலாம். வ – ப திரிபு. விண்ணன் – சங்க இலக்கியத்தில் விண்ணன் தாயன் என்ற பெயர் இடம்பெறுகிறது. கொரிய நாகரிகத்தில் Dangun வழிவந்த மன்னன் பெயர் Wina 1610 – 1552 BC தமிழில் விண்ண > விண்ணன். சேமன் – சிந்து முத்திரையயில் வழங்கும் பெயர். ஏமன் சகரமுன்மிகை(Prothesis) பெற்று சேமன் ஆனது. விழுப்புரம் அருகே ஏமப்பூர் என்று ஓர் ஊர் உள்ளது.
Hanyon I 957 -956 BC – தமிழில் கான் யாண் > கானன் யாணன் என செப்பமாக படிக்கலாம். இங்க ககரம் ஹகரமாகியது. சிந்து வெளி முத்திரைகளில் அன் ஈறு பெறாமல் இவ்விரு பெயரும் வழங்குகின்றன. சீனத்தின் கிழக்கு Han குடியில் ஒரு மன்னன் பெயர் Yan Kang 220 AD – தமிழில் யாண் கான். ன்>ங் என மூக்கொலி பெறும்.
SeraI (Tomai) 956 – 930 BC – தமிழில் சேர (தாமை) > சேரன் (தாமன்) என செப்பமாக படிக்கலாம். தாமன் ஐகார ஈறு பெற்றுள்ளது. அல் ஈறு பெற்றும் வழங்கும். தாமல் காஞ்சி மாவட்டத்தில் உள்ள ஓர் ஏரி. சேரன் சேரர்க்கான குடிப்பெயர். பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர் Tiglath Pileser 732 -729 BC – தமிழில் திகழ் ஆத் வில்லி சேர் > திகழ் ஆதன் வில்லி சேரன் என செப்பமாக படிக்கலாம். நெடுஞ் சேரல் ஆதன் ஒரு புகழ் மிக்க சேர மன்னன். சேரர் வில்லவர் எனப்பட்டதுடன் அவர் கொடிச் சின்னமும் வில். இப்பெயர் சேரர் பாபிலோனையும் ஆண்டதற்கு ஒரு சான்று. Nicauta Kandae(queen) 740 – 730 BC – தமிழில் அரசி நய் காத்த கந்தை எனபது செப்பமான் வடிவம். நய்யன் காத்தன் கந்தன் சிந்துவெளி முத்திரைகளில் பயில்வுறுகிறது. கந்தை பெண் பாலை தெளிவாக குறித்து வந்துள்ளது.
Erda Amen Awseya 681 – 675 BC – தமிழில் எருத ஆமன் அவ் சேய > எருதன் ஆமன் அவ்வன் சேயன் என செப்பமாக படிக்கலாம். எருதன்- எருதின் வலிமையை ஆணின் வலிமைக்கு ஒப்பிட்டு இடும் பெயர். காளை என்ற பெயர் இதற்கு சான்று. சீனத்தின் தெற்கு Nan Liang அரசின் ஓர் அரசன் பெயர் Tufa Rutan 402 – 414 AD -தமிழில் தூவா எருதன் > தூவான் எருதன் என செப்பமாக படிக்கலாம். தூவாக்குடி தமிழக ஊர். சேயன் – கொரிய நாகரிகத்தில் Gija வழிவந்த மன்னன் பெயர் Seon hye 925 -898 BC தமிழில் சேயன் கயி என்பது செப்பமான வடிவம். கயி சிந்து வெளியில் காஇ என பயில்வுற்றுள்ளது. அவ்வன் – தேனி வட்டம் புலிமான்கோம்பையில் கிட்டிய நடு கல் பிராமி கல்வெட்டில் வேள் ஊர் அவ்வன் பதவன் என்று பொறிக்கப்பட்டு உள்ளது.
Gasiyo Eskikatir – தமிழில் காத்தய்ய இசக்கி கதிர் > காத்தய்யன் இசக்கி கதிர் என செப்பமாக படிக்கலாம். ககரம் கடுஒலி பெற்றுள்ளது. தகரம்சகர இன ஒலி ஸகரமாக தரிந்தது. காத்தவராயன் இன்றும் வழங்கும் பெயர். இசக்கியம்மன், இசக்கிமுத்து ஆகிய பெயர்கள் தமிழகத்தில் வழங்குகின்றன. பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர் Ishki bal 1732 BC – தமிழில் இசக்கி பால் > இயக்கி வால் என செப்பமாக படிக்கலாம். வால் – ஒளிரும் வெண்மை எனப் பொருள், வ>ப திரிபால் பால் என வழங்கும். பால் – வெண்மைப் கருத்து வேர். கதிர்- கதிரேசன் என தமிழகத்தில் வழங்குகிறது. ஈலம் நாகரிகத்தல் ஒரு மன்னன் பெயர் Kutir Nahhunte 1740 BC – தமிழில் கதிர் நக்கந்தி > கதிர் நக்கன் கந்தி என செப்பமாக படிக்கலாம். நக்கன் சிந்து முத்திரைப் பெயர். கந்தன் > கந்தி ஆகும்.
Tomadyan Piyankhi III 671 – 659 BC – தமிழில் தாம் அதியன் பய்யங்கி > தாமன் அதியன் வய்யங்கி என செப்பமாக படிக்கலாம். அதியன் சேரக் கிளை மரபினரான அதியமான்கள் குடிப்பெயர். Elalion Taake 402 -392 BC – தமிழில் எல்லாளியன் தக்கி என்பது செப்பமான வடிவம். எல்லாளன் என்ற தமிழ் மன்னன் ஈழத்தை மிக சிறப்பாக ஆண்டவன். சீனத்தின் Tiefu பழங்குடி வேள் பெயர் Liu Eloulou 356 -358 BC தமிழில் ஒளிய எல்லாள > ஒளியன் எல்லாளன் என செப்பமாக படிக்கலாம். ஒளியன் சிந்து முத்திரைப் பெயர். திரை நகர போனீசிய மன்னன் பெயர் Elulaios 729- 694 BC – தமிழில் எல்லளைய > எல்லாளியன் என செப்பமாக படிக்கலாம். தக்கை – தக்கி, தக்கு, தக்கன் என்றும் வழங்கும். கோவை சூலூரில் கட்டிய சிந்து எழுத்து பொறித்த மட்கலனில் தக்க இன்னன் என பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. சப்பானிய வேந்தரின் ஈமப் பெயர் Taka Kura 1168 – 1180 AD – தக்க குர > தக்கன் குரவன் என செப்பமாக படிக்கலாம்.
Atserk Amen III 382 BC – தமிழில் ஆட் செருக் ஆமன் > ஆடு செருக்கு ஆமன் என செப்பமாக படிக்கலாம். ஆடு – வெற்றி, செருக்கு — பெருமிதம். ஆடு செருக்கு ஆமன் எனறால் வெற்றிச் செருக்கள்ள ஆமன் என பொருள். இது கடல் பிறகோட்டிய செங்குட்டுவன், சித்திர மாடத்து துஞ்சிய பாண்டியன் என்பது போல வினைச் சிறப்பு சுட்டிய பெயர். Kolas 295 – 285 BC – தமிழில் காள > காளன்என செப்பமாக படிக்கலாம். இது சிந்துவெளி முத்திரையில் காணப்படும் பெயர். தமிழகத்தில் இன்றும் வழங்குகிறது. காளி இதன் பெண் பால் பெயர். நடு ஆப்பிரிக்காவில் ஒரு மன்னன் பெயர் அலி காளன் என்பது.
Stiyo 269 – 255 BC – தமிழில் திய்ய > திய்யன் என செப்பமாக படிக்கலாம். தேனி வட்டம் புலிமான்கோம்பை என்ற ஊரில் பேடு திய்யன் அந்தவன் என்ற பெயர் பொறித்த பிராமி நடுகல் கண்டெடுக்கப்பட்டது. திய்யன் என்ற கேரள சாதிப் பெயர் மிக பின்னர் ஏற்பட்டது. கொரிய நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Deun gol 874 – 849 BC தமிழில் திய்யன் கோல் என செப்பமாக உள்ளது. தகர இனக் கடுஒலி பெற்றுள்ளது. கோல் – கோலப்பன் இன்றும் வழங்கும் பெயர்.
Bawawl 70 – 60 BC தமிழில் பவ்வல் > வவ்வல் என செப்பமாக படிக்கலாம். அன் ஈறு பெற்று வவ்வன் ஆகும். சீனத்தில் Xia அரசின் ஓர் அரசன் பெயர் Helian Bobo 407 – 425 AD – தமிழில் கிளியன் பப்ப > கிளியன் வவ்வன் என செப்பமாக படிக்கலாம். வகரம் பகர கடுஒலியாக திரிந்துள்ளது. இவன் மரபினர் எல்லாரும் கிளியன் பட்டம் தாங்கியுள்ளனர். சோழ மன்னர் சிலர் கிள்ளி எனப்பட்டனர். Barawas 60 – 50 BC – தமிழில் பரவன் என செப்பமாக படிக்கலாம். பகரம் கடுஒலி பெற்றுள்ளது. தமிழில் பரவன் மீனவரை குறிக்கும். கடல் பரவை எனப்படும்.
Serada 105 -121 AD தமிழில் சேர் ஆத > சேரன் ஆதன் என செப்பமாக படிக்கலாம். சேர மன்னர்களே ஆதன் என்ற பெயர் கொண்டிருந்தனர். காட்டாக, இமய வரம்பன் நெடுஞ் சேரல் ஆதன். Azegan Malbagad 200 – 207 AD – தமிழில் அழகன் மால் பகடு என செப்பமாக படிக்கலாம். மால் – கருமைக் கருத்து, பகடு – எருமை, ஆண் எருமையின் வலிமை ஒடு ஒப்பிட்டு இப்பெயரை சூட்டி இருக்கலாம்.
கிறித்தவ மதப் பரவலால் தமிழ்ப் பெயர்கள் ஒழிந்தன. ஆங்காங்கே கலப்பு பெயராக Tseyon / Tsion – திசையன் போன்ற பெயர்கள் வழக்கூன்றின. தமிழகம், சிந்துவெளி அல்லாத பிற நாகரிகங்களில் அகரம் ஒகரமாயும், வகரம் பகரமாயும், தகரம் சகரமாயும் திரிந்துள்ளன. அப்பெயர்களை தமிழாய் படிக்க மூல எழுத்தையே நாட வேண்டும். மேற்கு நாகரிக மன்னர் பெயர்களும், கிழகக்கு நாகரிக மன்னர் பெயர்களும் தமிழாய் இருப்பது இடைப்பட்ட சிந்து நாகரிகமும் தமிழர் நாகரிகமே என்பதை இது வரை மறுத்து வந்தவர்களை நம்பிக்கைப்படுத்த உதவும். எதியோபிய மன்னர் பெயர்கள் தமிழல்ல என மறுப்போர் சங்க இலக்கியஙகளில் கற்றத்துறைபோகிய தமிழ் அறிஞர்களை உசாவ வேண்டுகிறேன். அதோடு Indus Script Dravidian, 1995 என்ற நூலை மேற்கோளாக கொள்ளும்படி வேண்டுகறேன்.
மிகப் பலர் எண்ணுவது போல் மூலதாய் நாகரிகமான தமிழர் நாகரிகத்திற்கு ஆப்பிரிக்காவோ, சுமேரியாவோ, சிந்து வெளியோ அல்லது கிழக்கு நாகரிகங்களோ தாயகம் அல்ல. தமிழ் இலக்கியங்கள் தமிழர் தாயகத்தை தென்புலம் என்கின்றன. அயினும் அதற்கு தொல்லியல் சான்று ஏதும் இல்லை. இது தொடர்பாக தமிழ்நாடு தொல்லியல் துறை அடிக்கடல் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தள்ளது. நல்ல முடிவுகள் வரும் என எதிர் பாரக்கலாம். இப்பெயர் ஒப்பாய்வு ஒரு புதிய களமாக ஏற்கபட்டு விரிந்து பரவினால் தமிழ் நாகரிகத்தின் எல்லையும், காலமும் விரிந்து இருப்பதை நிறுவ இயலும்..
ஜப்பானியர் பெயர்களில் தமிழ் வடிவம்;
சிந்து எழுத்துகளை பேராசிரியர் இரா. மதிவாணன் படித்துக் காட்டி 20 ஆண்டுகள் ஆன பின்னும் அது புகழ் பெற்ற ஆய்வாளர்களால் இன்னும் ஏற்கபடாமலேயே உள்ளது. நான் 3 1/2 ஆண்டுகளுக்கு முன் அவரிடம் அவ் எழுத்துகளை படிக்கக் கற்றுக் கொண்டேன். ஈரெழுத்து சான்று இல்லாயினும் அவர் படித்த முறை சரியே.
மெஹர்கார் சிந்து நாகரிகம் 9,000 ஆண்டுகள் தொன்மையானவை என்பதால் சிந்து வெளி முத்திரைப் பெயர்கள் பிற நாகரிகங்களில் புழங்கி உள்ளனவா? என்பதை அறிய அதற்கு மேற்கே அமைந்த எதியோபியா, எகிபது, போனீசியா, அக்காடு, ஈலம், பாபிலோன் நாகரிக மன்னர் பெயர்களை ஒப்பாய்வு செய்ய Google ல் அந்நாகரிக மன்னர் பெயர் பட்டியலை தேடி சொடுக்கினேன். நான் எதிர் பார்த்தவாரே wikipedia free encyclopedia வில் மன்னர் பெயர் பட்டியல் கிட்டியது.
வியக்கும்படியாக இந்நாகரிக மன்னர் பெயர்கள் சிந்துவெளி முத்திரைப் பெயர்களோடும், சங்க இலக்கிய மாந்தர் பெயர்களோடும், தமிழ்நாட்டு பானை ஓட்டு சிந்து எழுத்துப் பொறிப்பு பெயர்களோடும் ஒத்திருக்கக் கண்டேன். எனவே ஊக்கமுற்று கிழக்கு நாகரிகங்களான சீனம், கொரியா, சப்பான் நாகரிக மன்னர் பெயர்களையும் ஒப்பிட்டேன். அவற்றுள் பல தமிழ் வடிவில் இருக்கக் கண்டேன்.
இப்பெயர் ஒப்புமை ஆய்வு தமிழர் நாகரிகம் பிற எல்லா நாகரிகங்களுக்கும் தாய் நாகரிகம் என்பதையும், இப் பண்டை நாகரிகங்களை தோற்றுவித்த தமிழர் ஒரு பொதுவான மூல இடத்தை விட்டகன்று இவ் இடங்களில் குடியேறு இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது, அதோடு தமிழ் மொழி 10,000 ஆண்டுகள் மேலான பழமை மிக்கது என்பதும் தெளிவான்து. இந்த ஒப்புமை ஆய்வு பேரா. இரா. மதிவாணன் சிந்து எழுத்துகளை படித்த முறை சரி என்று மெய்ப்பிக்கப் போதுமானது.
கிறித்தவ, இசுலாமிய மதப் பரவலால் மேற்கின் பண்டை நாகரிக தமிழ் பெயர்கள் அவ் இடங்களில் மறைந்தாலும் கிழக்கு நாகரிக இடங்களில் இன்றும் வழங்குவதை உணர முடிகிறது. சப்பான் நாகரிகம் இதற்கு ஒரு சிறந்த சான்று. நம் ஒப்புமை ஆய்வுக்கு தெளிவாக உள்ள சில சப்பானிய பிரதமர் பெயர்களையும் மன்னர் பெயர்களையும் எடுத்துக் கொள்வோம்.
வங்காளி, இந்தோனேசிய மொழிகள் போல சப்பானிய மொழியிலும் ‘அ’ கரம் ‘ஒ’ கரமாகியுள்ளது. அதோடு ‘க’கரம் ‘ஹ’ கரமாகவும், ‘வ’கரம் ‘ப’ கரமாகவும், ‘த’ கரம் ச, ஜ. ஷ வாக திரிந்து உள்ளது. இத் திரிபுகளின் மூல ஒலி கொண்டு படித்தால் தமிழ்ப் பெயர்கள் விளங்கத் தோன்றும்.
பதவி ஏற்பு வரிசையில் 2 ஆம் இடத்தை பிடிப்பவர் பிரதமர் kuroda kiyotaka1888-89 எனபவர். தமிழில் குறு ஆத கய்ய தக்க > குறு ஆதன் கய்யன் தக்கன் என செம்மையாக படிக்கலாம். குறு – இளமைப் பொருள், ஆதன் – சேரர் பெயர், கய்யன் – பண்டை மேற்கு நாகரிகங்களில் இடம் பெறுகிறது. தக்கன் – 1940 ல் கோவை சூளூரில் கிட்டிய சிந்து எழுத்து பொறித்த மட்கலத்தில் தக்க இன்னன் என்ற பெயர் எழுத்ப்பட்டுள்ளது.
பதவி ஏற்பு வரிசையில் 3 & 9 ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் yamagata Aritomo 1888-91 & 1898-1900எனபவர். தமிழில் யாம கத்த அரி தாம > யாமன் கத்தன் அரி தாமன் என செம்மையாக படிக்கலாம். யாமன் – ஒரு பழந் தமிழ்ப் பெயர். பின்பு யா > ஆ எனத் திரிந்து ஆமன் என சங்க இலக்கியத்தில் பயில்கின்றது. கத்தன் – சி.வெ. முத்திரையில் பயிலும் பெயர், அரி – அரியான் என அன் ஈறு பெற்று அரியான் குப்பம் என பதுச்சேரியில் ஓர் ஊருக்கு பெயராகி உள்ளது. தாமன் — பல மேற்கு நாகரிகங்களில் வழங்குகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாமல் எனற ஏரி உள்ளது.
பதவி ஏற்பு வரிசையில் 16 & 22 ஆம் இடங்களை பிடிப்பவர் பிரதமர் Yamamoto gonbee 1913-1914 தமிழில் யாம மத்த கான்வி > யாமன் மத்தன் கானவன் என செம்மையாக படிக்கலாம். சி. வெ. முத்திரைகளில் அன் ஈறு பெறாமல் மத் என்றும், ஈறு பெற்று மத்தன் எனறும் இப் பெயர் பயின்று வந்துள்ளது. பண்டைய போனீசிய திரை Ancient tyrian நாகரிக மன்னன் பெயர் Mattan I 840-832 BC இவன் பெயரில் அன் ஈறு இடம் பெறுவது தமிழ் அடையாளத்தை தெளிவாக சுட்டுகிறது. அன் ஆண் பால் ஈறு பல நாகரிகங்களில் அர்,அல், அம், ஐ, இ எனவும் முடிகிறது. அவவாறே கானவன் என்ற பெயர் கானவி என சப்பானில் வழங்குகிறது.
பதவி வரிசையில் 20 ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் Takahashi Korekiyo 1921-22 தமிழில் தக்க கத்தி(ஹ>க, ஷ > த மூலம்) காரி கய்ய > தக்கன் கத்தி காரி கய்யன் என செம்மையாக படிக்கலாம். கத்தன் எனபதே கத்தி ஆகியது. காரி — கடை ஏழு வள்ளல்களுல் ஒருவன் மலையமான் திருமுடிக் காரி, காரிக் கிழார் ஒரு புலவர். எகிபது நாகரிகத்தில் 4 ஆம் ஆள்குடியில்(Dynasty) ஒரு மன்னன் பெயர் MenKaure 2490- 2472 BC மேன் காரி. தமிழில் மேன் உயர்வான, மேலான என பொருள் தரும்; அன் ஈறு பெற்று மேனன் என்றாகும். 7 & 8 ஆம் ஆள்குடியில் பல மன்னர் காரியை பட்டமாகவே கொண்டுள்ளனர். அவருள் ஒருவன் Netri Kare 2150 BC நெற்றி காரி.
பதவி ஏற்பு வரிசையில் 24 & 26 ஆம் இடங்களை பிடிப்பவர் பிரதமர் Kato Takaaki தமிழில் காத்த தக்க அக்கி > காத்தன் தக்கன் அக்கி என செம்மையாக படிக்கலாம். காத்தன் – சி.வெ. முத்திரையில் இடம் பெறுகிறது; காத்தன்குடி ஈழத்தில் உள்ள ஓர் ஊர் பெயர்; காத்தமுத்து என இக்காலும் பெயர் தமிழில் வழங்குகிறது. அக்கன் என்பதே அக்கி ஆகியது. அன் ஈறு பெறாமல் அக் என பல நாகரிகங்களில் பயில்கின்றது. எதியோபியாவில் ஒரு மன்னன் பெயர் Gari Ak I (4404 BC) காரி அக். 6,400 ஆண்டுகள் பழமையான பெயர் இது. அக்கன் பிற நாகரிகங்களில் அக்கல் எனவும் வழங்கும். அண்மையில் வடலூர் அருகே மருங்கூர் என்ற இடத்தில் ‘அதியகன்’ என பெயர் பொறித்த பிராமி எழுத்து பானைஓடு கண்டெடுக்கப்பட்டது. இதை அத்தி+அக்கன் என பிரித்து படிக்க வேண்டும்.
பதவி ஏற்பு வரிசையில் 25 & 28 இடங்களை பிடிப்பவர் பிரதமர் Wakatsuki Reijiro 1926-27-31 இதில் வக்க என்ற தமிழ்ப் பெயர் உள்ளது. தமிழக பானைஓட்டு சிந்து எழுத்தில் வக்கன் என்ற பெயர் பயின்றுள்ளது. வ கரம் ப கரமாகி இப்பெயர் எகிபதின் 24 ஆம் ஆள்குடியில் ஒரு மன்னனுககு Bakenranef 720-715 BC வக்கன் அரணி என வழங்குகிறது.
பதவி ஏற்பு வரிசையில் 32 ஆம் இடத்தை பிடிப்பவர் பிரதமர் Hiroata Koki 1936-37 தமிழில் கீர அத்த காக்கை > கீரன் அத்தன் காக்கை என செம்மையாக படிக்கலாம். கீரன் ஹகர திரிபு பெற்று எதியோபியாவிலும்,எகிபதிலும் வழங்குகிறது. நக்கீரன், கீரனூர் ஆகியன இதன் தமிழ் மரபிற்கு சானறு. அத்தன் தேவாரத்தில் பயில்கிறது. காக்கை – ஈழமன்னன் பண்டார வன்னியனை ஆங்கிலர்க்கு காட்டிக் கொடுத்தவன் காக்கை வன்னியன். எகிபதின் 5ஆம் ஆள்குடி மன்னன் பெயர் Neferirkare Kakai 2477-2467BC.
பதவி ஏற்பு வரிசையில் 34 & 38 ஆம் இடங்களை பிடிப்பவர் பிரதமர் Konoe Fumimaro 1937-39 & 1940-41தமிழில் கானை உமி மாற > கானை உமி மாறன் என செம்மையாக படிக்கலாம். கானை – சி.வெ. முத்திரையில் அரிதாக வழங்கும் பெயர் இது கான், கானன் என சிந்து முத்திரையில் பரவலாக வழங்குகிறது. உமி – உமன் என தமிழக பானைஓட்டு சிந்து எழுத்துகளில் பயில்கிறது; உமி>வுமி>புமி>Fumi என திரியும். உமன் மேற்கு நாகரிகங்களில் உமர்(Omar) எனவழங்குகிறது இன்றும். மாறன் பாண்டியர்குரிய பெயர்.
பதவி ஏற்பில் 41 ஆம்இடத்தை பிடிப்பவர் பிரதமர் koiso Kuniaki 1944-45 தமிழில் காய் த குன்னி அக்கி > காயன் த குன்னி அக்கி என செம்மையாக படிக்கலாம். காயன் – ஆதாம் ஏவாள் மகன் Cain, மேற்கு நாகரிகங்களில் வழங்குகிறது. காயன்குளம் கேரளத்தின் ஓர் ஊர். குன்னி – அன் ஈறு பெறாமல் குன் எனவும், அன் ஈறு பெற்று குன்னன் எனவும் சி.வெ. முத்திரைகளில் பயில்கிறது. இன்றும் குன்னிராமன் என்ற பெயருள்ளோர் உண்டு. அக்கி – அக்கன், அக்கல், அக், அக்கம் என பலநாகரிகங்களில் வழங்குகிறது. பல்லங்கி என்ற இடத்தில் அமைந்த மாயன் நாகரிக மன்னர் பெயர் Ahkal Mo Nahb II 565 -570 AD அக்கல் மா நக்கவன்.
பதவி ஏற்பில் 46 ஆம் இடத்தை பிடிப்பவர் பிரதமர் Katayama Tetsu 1947-48 தமிழில் கத்த யாம திட்டு > கத்தன் யாமன் திட்டு என செம்மையாக படிக்கலாம். திட்டன் எனபதே திட்டு என வழங்குகிறது. திட்டன்குடி > திட்டக்குடி.
பதவி ஏற்பில் 61 ஆம் இடத்தை பிடிப்பவர் பிரதமர் Satu Eisaku 1964-72 தமிழில் சாத்து இசக்கு > சாத்தன் இயசக்கன் என செம்மையாக படிக்கலாம். சாத்தன் – சி.வெ. முத்திரைகளிலும், சங்க இலக்கியங்களிலும் பயிலும் பெயர். சாத்தய்யா, சாத்தப்பன் இற்றை வழக்கு. இசக்கு இசக்கிமுத்து என இக்கால் நெல்லையில் வழங்குகிறது. இந்த இசக்கு மேற்கு நாகரிகங்களிலும் வழங்குகிறது.
பதவி ஏற்பு வரிசையில் 64 ஆம் இடத்தை பிடிப்பவர் Tanaka kakuei 1972-74 தமிழில் தன் அக்க கா குய்யி > தன்னன் அக்கன் கா குய்யி என செம்மையாக படிக்கலாம். தன்னன் – அன் ஈறு பெறாமல் தன் என்றும், அன் ஈறு பெற்று தன்னன் எனறும் சி.வெ. முத்திரைகளில் வழங்குகிறது. தன்னவன் இதன் மற்றொரு வடிவம். கா – சி.வெ. ல் ஒற்றை எழுத்தாகவே பயில்கிறது.
ஆங்கில U எழுத்தின் இரு மேல் ஓரங்களிலும் இரு கோடுகள் பெற்று ஏராளமாக காணப்படுகிறது. இக் கா ‘திரு’ என்பதைப் போல் மதிப்புரவாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். பல்லங்கி மாயன், எகிபது, போன்ற நாகரிகங்களிலும் ஒற்றை எழுத்தாகவே வழங்குகிறது. எகிபதில் ஒரு பொதுமகன் பெயர் கா அப்பர் என்பது. குய்யி – சி..வெ. முத்திரைகளில் அன் ஈறு பெறாமல் குய் எனறும் அன் ஈறு பெற்று குய்யன் என்றும் வழங்குகிறது. அசுடெக் மாயன் நாகரிக மன்னர்கள் பெயர் Cui tal huac 1520AD குய் தள் குய் அக் & Cua uhtec mac 1520-1525 AD குய்ய உக் திக் மாக் என்பது.
பதவி வரிசையில் 67ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் Fukuda Takeo 1976-78 பக்குட தக் ஈய > பக் உடை தக்கன் ஈயன் பதவி வரிசையில் 91 ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் Fukuda yasuo 2007-2008. தமிழில் பக் எனறால் பை என பொருள் பக் உடை என்றால் பை போன்ற உடை எனப்பொருள். சங்க இலக்கியத்தில் பயிலும் ஆசிவக மதத் தலைவர் பெயர் பக்குடை நன் கணியார் என்பது.
இப்போது பதவியில் உள்ள பிரதமர் பெயர் Kan Naoto 2010 முதல் தமிழில் கான் நவ் அத்த > கானன் நவ்வன் அத்தன் என செம்மையாக படிக்கலாம். கானன் – அன் ஈறு பெறாமல் கான் என்றும், அன் ஈறு பெற்று கானன் என்றும் சி.வெ. பயில்கிறது. கானவன் இதன் மற்றொரு வழக்கு. கானவன் தமிழக பானைஓட்டு சிந்து எழுத்தில் இடம்பெறுகிறது. அத்தன் -அத்தர், அத்தி என பிற நாகரிகங்களில் வழங்கும்.
சென்னை சப்பானிய துணைத் தூதரக தலைவர் பெயர் Takayuki Kitagawa தமிழில் தக்கை உக்கி கித்த கவ்வ > தக்கை உக்கி கித்தன் கவ்வன் இதன் செம்மை வடிவு. தக்கை- தக்கன், தக்கி, தக்கு எனவும் வழங்கலாம். உக்கி தமிழக பானைஓட்டு சிந்து எழுத்தில் உக்கன் பயின்று வந்துள்ளது. கித்தன் ஈரானின் தென்மேற்கே அமைந்த ஈலம் நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Hita I 2270 BC க > ஹ திரிபு. மற்றொரு மன்னன் பெயர் Attar Kittah 1370 BC கித்தன் ஈலத்தில் பயின்றாலும் சி.வெ. இப்பெயர் இல்லை. கவ்வன் – சி.வெ.முத்திரையில் மட்டும் காணப்படுகிறது.
இனி சப்பான், கொரியா, சீனம் ஆகிய நாகரிகங்களில் மன்னர்களுக்கு இறந்தபின்பு பெயர் (PosthumusNames) வைப்பது ஒரு வழக்கம். அவற்றுள் அடங்கும் சப்பானிய வேந்தர் பெயர்கள

Wednesday 4 December 2013

குண்டான உடல் மெலிதாக வேண்டுமா?

குண்டான உடல் மெலிதாக வேண்டுமா?
               குண்டான உடல் மெலிதாக வேண்டுமா? தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் வரை கீழ்கானும் படத்திலுள்ளபடி செய்யுங்கள் உங்களின் குண்டான உடல் உரு மாதத்திற்குள் மெலிதாக மாறுவதை கானலாம்.


பஞ்ச தாண்டவ தலங்கள் மற்றும் ஐயப்பனின் 18 படிகளின் தத்துவம்

 பஞ்ச தாண்டவ தலங்கள்

ஐயப்பனின் 18 படிகளின் தத்துவம்

சென்னை தமிழ் மொழிகள்

சென்னை தமிழ் மொழிகள்

Sunday 1 December 2013

எச்சரிக்கை..!

எச்சரிக்கை..!

பிறரும் அறிய இச்செய்தியினை ஷேர் செய்யுங்கள்...!

"உணவுப்பொருட்களில் கலப்படம்"

ஒத்த உருவமும், நிறமும் உடைய பல்வேறு பொருள்கள் தினசரி நாம் உபயோகிக்கும் உணவுப்பொருட்களுடன் கலப்படம் செய்யப்படுகிறது. உதாரணமாக...

மிளகில் --------------------பப்பாளி விதை
ஜீனியில் -------------------ரவா [அ ] வெள்ளை மணல்
அரிசியில் ------------------கல் , நெல்
வெண்ணையில் ---------மாவு
நெய்யில் ---------------------டால்ட
டீத்தூள் -----------------------மரத்தூள் [அ ] சாயத்தூள்
பச்சை பட்டாணி ----------பச்சை நிற சாயம்
அதிக விலையுள்ள எண்ணெய் --------குறைந்த விலையுள்ள எண்ணெய்

எனவே உணவுப்பொருட்கள் வாங்கும் போது, விலையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் தரத்தையும் பார்க்க வேண்டும் ! விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக தரமற்ற கலப்பட பொருட்களை வாங்ககூடாது கலப்பட உணவுப்பொருட்களை உண்பதால் உடல் நலம் பாதிக்கப்படுவதுடன், கண்பார்வை குறைவு, குடல்புண், வாத நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன ..!

இயற்கை மருத்துவக் குறிப்புகள்

இயற்கை மருத்துவக் குறிப்புகள்

சளிக் காய்ச்சல்
புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

வயிற்றுப் போக்கு
சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

வாயுக் கோளாறு
மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

குடிநீரில் எலுமிச்சை சாறு சிறுநீரக கல்லை தடுக்கும்

குடிநீரில் எலுமிச்சை சாறு சிறுநீரக கல்லை தடுக்கும்

சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு நோயாளிகளுக்கு சிறுநீரக பாதிப்பு வர வாய்ப்பு அதிகம். இந்தியாவில் 5ல் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இதில் 30சதவீத நபர்களுக்கு சிறுநீரக நோய் வருகிறது. சிறுநீரக நோய்க்கான அறிகுறியை எளிதில் அறிய முடியாது. தற்காலிக சிறுநீரக செயலிழப்பு உள்ள 100பேரில் 60பேரை காப்பாற்றலாம்.

முற்றிய நோயாளிகளை தொடர் சிகிச்சை, டயாலிசிஸ் மூலம் குணப்படுத்தலாம். நாளொன்றுக்கு 180 லிட்டர் ரத்தத்தை சுத்தம் செய்து, அதில் 2லிட்டரை சிறுநீராக வெளியேற்றும் வேலையை நமது சிறுநீரகம் செய்கிறது. சிறுநீரகத்தை பாதுகாத்தால் இதய நோய்களை கட்டுப்படுத்தலாம் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிறுநீரில் புரதச்சத்து வெளியாதல் நோயின் ஆரம்ப கட்ட அறிகுறியா கும். ரத்தத்தில் கிரியாட்டி னின் அளவு 1.4மி.கிராமிற்கு பதில், 1.5மி.கிராம் இருந் தால் அடுத்த 5ஆண்டுகளுக்குள் சிறுநீரக நோய் வர வாய்ப்பிருக்கிறது. எளிய பரிசோதனைகளான யூரின் அல்புமின், யூரியா, புரோட்டின் மூலம் சிறுநீரக பாதிப்பினை கண்டறியலாம். தினமும் 3லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.

வெயில் காலம் என்ப தால் குடிநீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்தலாம். இதிலுள்ள சிட்ரேட் உப்பு சிறுநீரக கல் வருவதை தடுக்கும். தினம் 30நிமிடம் உடற்பயிற்சி அவசியம். ஆண்டுக்கு ஒருமுறை சிறு நீரக மருத்துவ பரிசோதனை வேண்டும்.

தாளிக்கீரை

தாளிக்கீரை

இது நறுந்தாளி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தானாக விளைந்து வீணாக போகிறது. கிராமப்புறங்களில் பரிச்சயமுள்ளவர்கள் இந்த கீரையை பார்த்திருக்கலாம்.

வேலிகள், சிறு காடுகள் ஆகியவற்றில் காணப்படும் கொடியினம். உடல் கொதி
ப்பு, எரிச்சல் போக்கும். காமம் பெருக்கும் வல்லமை படைத்தது.

இதில் இலை மட்டுமே மிகுந்த மருத்துவ குணம் கொண்டது.

இலையை பருப்புடன் சேர்த்து கடைந்து குழம்பாகவோ, கூட்டாகவோ சமைத்து உண்ண பல பலன்கள் கிடைக்கும்.

உள் உறுப்புகளில் ஏற்படும் புண், அழற்சி, வாய்ப்புண், சிறு நீரக்கப்பாதையில் தோன்றும் நோய்கள், விந்தணு குறைபாடு போன்றவை காணாமல் போகும்.

இதன் இலைகளை அரைத்து தினந்தோறும் உடலில் தலைமுதல் கால்வரை தேய்த்து குளித்து வர உடல் அரிப்பு நீங்கும்,தோல் நோய்கள் அணுகாது. சருமம் பளபளப்பு அடையும். உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.

இதனை தொடர்ந்து உண்டுவர ஒரு சில தினங்களிலேயே குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

இனி தாளிக்கீரை என்பது என்ன?எங்கே கிடைக்கும் என்று தேடி எடுத்து பயன்படுத்தி உடலுக்கு வலு சேர்ப்போமா?

சிறுநீரகக்கல் (Kidney stone) ஆபரேசன் செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு உதவுகிறது

வாழைத்தண்டு

சிறுநீரகக்கல் (Kidney stone) ஆபரேசன் செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு உதவுகிறது. 100gm தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்தால் ஒரு நபருக்கு ஒரு நேரத்திற்குப் போதுமானது. பாம்புக்கடி போன்ற விஷத்தை வெளியேற்ற உதவுகிறது. (Very effecitve in kidney disorders).சிறுநீர் தொல்லைகள் வராமல், சிறுநீரகத்தைக் கழுவி சுத்தம் செய்வதற்காக ஆரோக்கியமாக வாழ்பவர்கள் கூட வாரம் இரண்டுநாள் வாழைத்தண்டு சாறு குடிக்க வேண்டும்.

இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்

இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்

இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது. இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.

இளநரை போக்க மூலிகை எண்ணெய்

தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3
கறிவேப்பிலை – 2 இணுக்கு
கொத்தமல்லலி – சிறிதளவு
நெல்லி வற்றல் – 10 கிராம்
வெட்டிவேர் – 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.