வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Tuesday 26 November 2013

கல்லீரலீன் முக்கியத்துவம்:-

கல்லீரலீன் முக்கியத்துவம்:-

கல்லீரல் - மனித உடலின் மிகப் பெரிய ரசாயனத் தொழிற்சாலை!

ஊட்டச் சத்துக்களை உடைத்து உடலுக்குத் தேவையானப் பொருளாக மாற்றி, உடலின் பல பகுதிகளில் சேகரித்துவைப்பது, நச்சுப் பொருட்களை வெளியேற்றுவது என ஆயிரக்கணக்கான பணிகள் இங்கே நடக்கின்றன. உடலின் மிகப் பெரிய உள் உறுப்பு, மிகப் பெரிய சுரப்பி, வெட்டினாலும் மீண்டும் வளரக்கூடியது... இப்படிப் பல்வேறு சிறப்புகளைக்கொண்ட உறுப்பு... கல்லீரல்.
'மனிதனின் வலது வயிற்றுப் பகுதிக்கு மேல், உதரவிதானத்தை ஒட்டியபடி அமைந்துள்ள முக்கோண வடிவ உறுப்பு இது. பிரச்னையை வெளியே காட்டாமல் சமாளிக்கக்கூடியது. அதனால், பிரச்னை முற்றும் வரை வெளியே தெரியாமலேயே இருக்கும். பாதிப்பானது 50 முதல் 60 சதவிகிதத்தைத் தாண்டும்போதுதான், அதன் அறிகுறிகள் நமக்குத் தெரியவரும்''

''கல்லீரலின் சின்தடிக் பணி என்றால், ரத்தம் உறையத் தேவையான புரதம் உள்ளிட்ட ஏராளமான நொதிகள், கொழுப்பு, கார்போஹைட்ரேட் போன்ற உடலுக்குத் தேவையான பல பொருட்களை உற்பத்தி செய்வதாகும். இதில் ஒரு என்சைம் சுரப்பது தடைபட்டாலும் ஊட்டச் சத்தை உடைக்கும் பணி தடைபட்டு, வளர்சிதை மாற்றப் பணியில் தடை ஏற்பட்டுவிடும். இதை 'மெட்டபாலிக் டிஸ்ஆர்டர்’ என்பார்கள். அடுத்ததாக 'டீடாக்சிஃபிகேஷன்’. அதாவது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை, மருந்துகளை நீர்த்துப்போகச்செய்து வெளியேற்றுவது. உதாரணத்துக்கு புரதம் உடைக்கப்படும்போது, அது அமோனியாவை வெளிப்படுத்தும். உடலில் அமோனியா அளவு அதிகரித்தால், உயிரிழப்பு வரைக்கும் கொண்டுசெல்லும். எனவே, அந்த அமோனியாவை யூரியாவாக உடைக்கும் பணியைக் கல்லீரல் செய்கிறது. இது ஐந்து கட்டங்களாக நடக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு என்சைம் தேவைப்படும். இம்யூனாலஜிக்கல் பணி என்பது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மைக்கு உதவுவது. 50 முதல் 60 சதவிகித நோய் எதிர்ப்புத் தன்மைக்கு கல்லீரலே காரணம். கல்லீரல் செயல் இழந்தால், இந்தப் பணிகளும் பாதிக்கப்படும்.

உடலின் நச்சுப் பொருளை வெளியேற்ற டயாலிசிஸ் கருவிகள் உள்ளன. ஆனால், மற்ற பணிகளைச் செய்ய இது வரை எந்த இயந்திரமும் இல்லை. கல்லீரல் செயல் இழந்துவிட்டால், அதற்கு ஒரே தீர்வு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான். இதற்கானச் சிகிச்சைக் கட்டணம் பல லட்சங்களைத் தாண்டும்.

கல்லீரல் பிரச்னைகளை, குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். குழந்தைகளுக்கானப் பிரச்னைகள் பிறவியிலேயே வரக்கூடியவை. பெரியவர்களுக்கு ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் அல்லாத காரணங்களால் கல்லீரல் நோய்கள் ஏற்படுகின்றன''

கல்லீரல் பாதுகாப்புபற்றி அளிக்கும் டிப்ஸ் இங்கே...

1. கொழுப்பை குறைப்போம்

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள். அதிகப்படியான கொழுப்புதான் கல்லீரல் பிரச்னைக்கு மிக முக்கியக் காரணம். கொழுப்பு கல்லீரல் திசுக்களில் சேகரித்துவைக்கப்படும்போது, கல்லீரல் திசுக்கள் பாதிக்கப்படும். நாள் ஆகஆக பாதிக்கப்பட்ட கல்லீரல் செல்களும் அழிந்துவிடும். பின்னர், அந்தக் கொழுப்பு ரத்தத்தில் பயணித்து உடலின் வேறு பகுதிகளுக்கும் சென்றுவிடும். இப்படி லட்சக்கணக்கில் கல்லீரல் செல்கள் அழியும்போது கல்லீரல் சுருக்கம் (Liver Cirrhosis)ஏற்படும். இதைத் தவிர்க்க உணவில் கொழுப்பு அளவைக் குறைக்க வேண்டும். நாம் சாப்பிடும் உணவில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரியைக் கொழுப்பாக மாற்றும் பணியைக் கல்லீரல் செய்கிறது. சராசரியாக பாசல் மெட்டபாலிக் ரேட் (basal metabolic rate) என்பது ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 1,600 - 1,800 கலோரியாகவும் பெண்களுக்கு 1,300 முதல் 1,500 கலோரியாகவும் இருக்க வேண்டும். உங்கள் உடலுக்கு ஏற்ற பாசல் மெட்டபாலிக் ரேட் எவ்வளவு என்பதைக் கண்டறிந்து, அதற்கு ஏற்ற வகையில் உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள். பாடி மாஸ் இன்டெக்ஸ் குறியீடு 17 முதல் 24.99 என்ற அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம்.

2. இயற்கை உணவு

ஆட்டிறைச்சியையும் மாட்டிறைச்சியையும் தவிர்க்க வேண்டும். மாற்றாக, மீன் சாப்பிடலாம். அதுவும் எண்ணெயில் பொரிக்காமல், குழம்பு மீன்களாகச் சாப்பிடலாம். காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகளை சாப்பாட்டில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். உடல் பருமன் ஏற்படாமல் இருக்க, ஐஸ்கிரீம், நொறுக்குத் தீனிகள், சாஃப்ட் டிரிங்க்ஸ் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள். இது மாரடைப்பு, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்றவற்றையும் தவிர்க்க உதவும்.

3. உடற்பயிற்சி

கொழுப்பைக் கரைக்கவும் உடல்

No comments:

Post a Comment