வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Tuesday 27 August 2013

உலக மனித உரிமைகள் சாற்றுரை

உலக மனித உரிமைகள் சாற்றுரை


உலக மனித உரிமைகள் சாற்றுரை (Universal Declaration of Human Rights) என்பது, 
1948 ஆம் ஆண்டில் பாரிசில் உள்ள சைலட் மாளிகையில் வைத்து, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சாற்றுரை ஆகும். கின்னஸ் பதிவுகள் நூல், இதனை மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் எனக் குறிப்பிடுகிறது. இச் சாற்றுரை இரண்டாம் உலகப் போரில் இருந்து பெற்ற பட்டறிவுகளிலிருந்து உருவானது. அத்துடன், ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவே உரித்தாக உள்ள உரிமைகள் பற்றிய உலகளாவிய வெளிப்பாடும் இதுவே. இச் சாற்றுரையில் 30 பிரிவுகள் உள்ளன. இவை பின்னர் உருவாக்கப்பட்ட அனைத்துலக ஒப்பந்தங்கள், பிரதேச மனித உரிமைகள் ஆவணங்கள், தேசிய அரசியலமைப்புச் சட்டங்கள், பிற சட்டங்கள் என்பவை மூலம் விரிவாக்கப்பட்டன. மனித உரிமைகள் அனைத்துலகச் சட்டவிதி, அனைத்துலக மனித உரிமைகள் சாற்றுரையையும்; பொருளியல், சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம்குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம் ஆகிய ஆவணங்களையும்; அதன் விருப்பத்தின் பேரில் கைக்கொள்ளக்கூடிய இரண்டு நடவடிக்கை விதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

உறுப்புரைகள்

  1. நாம் அனைவரும் சுதந்திரமாகவும் உரிமைகளில் சமமாகவும் பிறக்கிறோம்
  2. இன, நிற, பால், மொழி, சமய, அரசியல் கருத்து, தேசியம், சொத்து, பிறப்பு பாகுபாடு காட்டேதே
  3. வாழ்வு உரிமை
  4. யாரும் அடிமை இல்லை
  5. யாரும் சித்தரவதைக்கு உட்படலாகது
  6. எவ்விடத்திலும் ஒருவருக்கு உரிமைகள் உண்டு
  7. சட்டத்தின்முன் சமவுரிமை
  8. நியாமற்று தடுத்துவைக்கமுடியாது
  9. நீதியான வழக்குக்கான உரிமை
  10. குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி
  11. அந்தரங்க உரிமை
  12. நகர்வுச் சுதந்திரம்
  13. துன்புறுத்தலிலிருந்து புகலிட உரிமை
  14. தேசியத்துக்கான உரிமை
  15. திருமணம் குடும்பம் செய்ய சுதந்திரம்
  16. ஆதன உரிமை
  17. சிந்தனை சுதந்திரம், உள்ளுணர்வு சுதந்திரம், சமயச் சுதந்திரம்
  18. கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம்
  19. கூடல் சுதந்திரம்
  20. மக்களாட்சி உரிமை
  21. சமூக பாதுகாப்பு உரிமை
  22. தொழிலாளர் உரிமைகள்
  23. விளையாட, ஓய்வெடுக்க உரிமை
  24. உணவுக்கும் உறையுளுக்குமான உரிமை
  25. கல்விக்கான உரிமை
  26. பண்பாட்டு பங்களிப்பு உரிமை, ஆக்கவுரிமை
  27. நியாமான விடுதலை பெற்ற உலகு
  28. பொறுப்புகள்
  29. மனித உரிமைகளை யாரும் பறிக்கமுடியாது

No comments:

Post a Comment