வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Saturday 8 June 2013

பப்பாளி பழம்

பப்பாளியில் வைட்டமின் ஏ, பி, சி, ரிபோ பாப்பைன் என்சைம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் இ மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன.
 


மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும், கண் பார்வையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கும் பப்பாளி பழம் நல்லது.

கர்ப்பிணிப் பெண்கள் முதல் 2 மாதங்களுக்கு பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
...
சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும், குடல் பூச்சிகளைச் அழித்து சுத்தம் செய்யும் சக்தி பப்பாளிக்கு உள்ளது.

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

பப்பாளியை தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

உடலில் உள்ள அதிக கொழுப்பைக் குறைக்கும் சக்தி பப்பாளிக்கு உள்ளது.

தோளில் ஏற்படும் தொற்றுக்களுக்கும், காயங்களுக்கும் பப்பாளி சிறந்த மருந்தாக உள்ளது. அடிபட்ட இடத்தில் பப்பாளிப் பழச் சாறை தடவினால், வீக்கத்தைக் குறைக்கலாம்.

5 மாதத்தைக் கடந்த கர்ப்பிணிப் பெண்கள், சிறிய துண்டு பாப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வந்தால் மந்தத் தன்மை குணமடையும்.

தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்கு பப்பாளி சிறந்த மருந்தாக உள்ளது. பப்பாளி கலந்த ஷேம்புக்களையும் பயன்படுத்தலாம்.

பெண்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிடாய் பிரச்னைகளுக்கு பப்பாளிக் காய் நல்ல பலன் தரும்.

வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் படிந்துள்ள கழிவுகளை அகற்ற பப்பாளி அருமருந்தாகும். வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 அல்லது 4 நாட்களுக்கு பப்பாளி சாப்பிட்டால், குடலில் உள்ள அனைத்துக் கழிவுகளும் அகற்றப்படும்.

அடிக்கடி சளி, இரும்பல், காய்ச்சல் வந்து அவதிப்படுபவர்கள் பப்பாளிப் பழம் சாப்பிட்டால், இயற்கையாகவே உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

பப்பாளி பழத்தின் தோல் முதல் விதை வரை அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டதாக உள்ளது.

No comments:

Post a Comment